ரஜினி நடிக்கும் கோச்சடையானின் முதற் கட்ட படப்பிடிப்பு லண்டனிலும், இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தற்போது கேரளாவிலும் நடந்து வருகிறது.
இப்படத்தில் சரத்குமார், ஆதி, முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். நாயகியாக தீபிகா படுகோனே நடிக்கிறார். ஆதி நடித்த காட்சிகள் சமீபத்தில் படமாக்கப்பட்டது.
... இப்படத்தில் நடிப்பது குறித்து ஆதி கூறியதாவது: ரஜினியின் கோச்சடையான் படத்தில் நடிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. ரசிகர்களுக்கு இதன் மூலம் புதிய அனுபவத்தை ஏற்படுத்தி கொடுத்துள்ள சவுந்தர்யாவுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
எனது கதாபாத்திரத்தில் ஒன்றி நடித்தேன். அதே நேரம் சவாலாகவும் இருந்தது. ரஜினியை சந்தித்தது உற்சாகமூட்டுவதாக அமைந்தது.
நான் நடித்து முடித்த கடைசி நாளில் ரஜினியுடன் சிறிது நேரம் பேச சந்தர்ப்பம் கிடைத்தது. அப்போது அவருடன் புகைப்படம் எடுத்துக் கொள்ள ஆசைப்பட்டேன்.
அதை அவரிடத்தில் சொல்ல தயங்கினேன். ஆனால் ரஜினி திடீரென என்னை பக்கத்தில் அழைத்து புகைப்படம் எடுத்துக் கொள்ளலாம் என்றார். என் தோளில் கைபோட்டு படம் எடுத்தார். அது மறக்க முடியாத தருணங்களாக அமைந்தது என்று தெரிவித்துள்ளார்.
இப்படத்தில் சரத்குமார், ஆதி, முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். நாயகியாக தீபிகா படுகோனே நடிக்கிறார். ஆதி நடித்த காட்சிகள் சமீபத்தில் படமாக்கப்பட்டது.
... இப்படத்தில் நடிப்பது குறித்து ஆதி கூறியதாவது: ரஜினியின் கோச்சடையான் படத்தில் நடிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. ரசிகர்களுக்கு இதன் மூலம் புதிய அனுபவத்தை ஏற்படுத்தி கொடுத்துள்ள சவுந்தர்யாவுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
எனது கதாபாத்திரத்தில் ஒன்றி நடித்தேன். அதே நேரம் சவாலாகவும் இருந்தது. ரஜினியை சந்தித்தது உற்சாகமூட்டுவதாக அமைந்தது.
நான் நடித்து முடித்த கடைசி நாளில் ரஜினியுடன் சிறிது நேரம் பேச சந்தர்ப்பம் கிடைத்தது. அப்போது அவருடன் புகைப்படம் எடுத்துக் கொள்ள ஆசைப்பட்டேன்.
அதை அவரிடத்தில் சொல்ல தயங்கினேன். ஆனால் ரஜினி திடீரென என்னை பக்கத்தில் அழைத்து புகைப்படம் எடுத்துக் கொள்ளலாம் என்றார். என் தோளில் கைபோட்டு படம் எடுத்தார். அது மறக்க முடியாத தருணங்களாக அமைந்தது என்று தெரிவித்துள்ளார்.


