Thursday, June 14, 2012

மரணத்தை வெல்ல முடியமா ?


மனிதன் மரணத்தை வெல்ல முடியுமா ?முடியாதா? என்ற வினா மக்களிடையே பல்லாண்டு காலமாக உள்ள சந்தேகங்களாகும் .இதற்கு பதில் ஆன்மீக வாதிகளாலும் ,அறிவியல் வல்லுனர்களாலும் அணுக்களை ஆராய்ச்சி செய்யும்,ஆணு ஆராய்ச்சி யாளர்களாலும் ,விஞஞான ஆராய்ச்சி யாளர்களாலும் ,மற்றும் உள்ள பகுத்தறிவு வாதிகளாலும் ,பொது சிந்தனை யாளர்களாலும் இன்றுவரை {வள்ளலாரைத் தவிர } யாராலும் பதில் சொல்ல,பதில் காண முடியாமல் விழிக்கிறார்கள் .

ஒரு சிலர் உலகில் தோன்றியது எல்லாம் அழிந்து கொண்டேதான் இருக்கும் என்கிறார்கள்.ஒருசிலர் எல்லா உயிர்களும் பிறந்து பிறந்து இறந்து இறந்து கொண்டேதான் இருக்கும்,அதுவே இறைவனுடைய திருவிளையாடல் என்கிறார்கள்.ஒருசிலர் உலகில் படைக்கப் பட்ட அனைத்தும் மனிதர்களுக் காகத்தான் ஆதலால் அனைத்தையும் அழித்து தின்று ஏப்பம் போட்டுவிட்டு மனிதனும் அழிந்துவிட வேண்டியது தான் என்கிறார்கள்.ஒருசிலர் மனிதன் ஒழுக்க முள்ளவனாக வாழ்ந்து சொர்க்கம் ,சிவலோகம் ,வைகுண்டம் என்னும் இடத்திற்கு சென்று மகிழ்ச்சியுடன் இருக்கலாம் என்கிறார்கள்.

ஒருசிலர் உடம்போடு சமாதி நிலை அடைந்து இறை நிலையை அடையலாம் என்கிறார்கள்,ஒருசிலர் காசி ராமேஸ்வரம் ,இமயமலை,கைலாயமலை ,போன்ற புண்ணிய தீர்த்தங்களை தரிசித்து ஆலய வழிபாடு போன்ற கர்மங்கள் செய்வதால் கர்மம் தொலைந்து இறை நிலையை அடையலாம் என்கிறார்கள் .ஒருசிலர் உயிர்களின் பரிணாம வளர்ச்சி தோற்றமும மாற்றமும் இயற்கை யாகும் .அதலால் கடவுள் என்பது ஒன்றும் இல்லை எல்லாம் அணுக்களின் சேர்க்கையாகும் என்கிறார்கள் .ஒருசிலர் வேதம் ஆகமம் புராணங்கள் இதிகாசம் சாத்திரம போன்றவைகளை படித்து அதன்படி வாழ்ந்து வருபவகள் மட்டும்தான் இறைவனையே அடைய முடியும் என்கிறார்கள்,ஒருசிலர் உயிர்களுக்கு தொண்டு செய்தால்போதும்,பிற உயிர்களை வதைக்காமல் இருந்தால் போதும்,இறை நிலையை அடையலாம் என்கிறார்கள்.

சமய,மதத் தலைவர்கள் என்ன சொல்கிறார்களோ அதனைக் கண்ணை முடிக்கொண்டு அதன்படி வர்ணம் ஆசிரமம் ஆசாரங்கள் போன்ற சங்கற்ப விகற்பங்களை செய்து இறை நிலையை அடையலாம் என்கிறார்கள்.இப்படி எண்ணற்ற வழிமுறைகள் ,என்பனப் போன்ற கருத்துக்கள் மனித வாழ்க்கைக்கு பலபேர் பல வழிகளில் வகுத்து வைத்துள்ளார்கள்

ஒரு சிலர் எல்லா வற்றிற்கும் ஆசைதான் காரணம் ஆசையை அழித்தால் இறை நிலையை அடையலாம் என்கிறார்கள் ஒரு சிலர் துறந்தாற்க்கும்,துவ்வா தார்க்கும் இறந்தார்க்கும் இல் வாழ்வான் துணை என்கிறார்கள் அவர்களே இறைவனை அடையமுடியும் என்கிறார்கள்.

எதைப் பற்றியும் கவலைப் படாமல் பணம் கிடைத்தால் போதும் எப்படி வேண்டுமாலும் வாழலாம் பணம், பெண், பொன் இருந்தால் போதும் என்று எண்ணி மக்களின் உழைப்பை சுரண்டி, பகல் கொள்ளை அடித்து வாழ்ந்து கொண்டு உள்ளார்கள்.இப்படி மக்கள் மனநிலையை குழைப்பி வைத்துள்ள நிலையில் மக்கள் குழம்பிக் கொண்டு உள்ளார்கள்.எவை உண்மை ,எவை பொய் என்பது தெரியாமல், மலத்தில் புழுத்த புழுக்களைப் போல் மக்கள் தவித்துக் கொண்டு உள்ளார்கள்

இதற்கெல்லாம் ஒரு முடிவு கட்ட,இறைவனால் இந்த உலகிற்கு வருவிக்கப் பட்டவர்தான் திரு அருட்பிரகாச வள்ளலார் என்பவராகும்.

மனித பிறப்பு மனித வாழ்க்கை என்பது என்ன?

மனித பிறப்பு என்பது எல்லாப் பிறப்பு களிலும் உயர்ந்த பிறப்பு என்பது அனைவருக்கும் தெரிந்த செய்தியாகும்.மனிதன் பிறப்பு என்பது இந்த மாயை உலகில் அறம்,பொருள் இன்பம்,வீடுபேறு,என்ற நான்கையும் அனுபவித்து பின் பற்று அற்று ,இறைவன் அருளைப் பெற்று இறை நிலையை அடைவதுதான் {அதாவது வந்த இடம் தெரிந்து செல்வது } உண்மையான மனித வாழ்க்கையாகும் ,அதுதான் பேரின்பமாகும்.மற்றவை அனைத்தும் அழிந்து போகும் சிற்றின்பமாகும். ஆனால் மனித பிறப்பு எடுத்த எந்த மனிதர்களும் அந்த நிலையை அடையவில்லை.அப்படி அடைந்ததாக சொல்வதெல்லாம் சுத்த பொய்யாகும்.

உடம்புடன் செல்ல முடியுமா ? உடம்பை அழித்து விட்டு செல்லமுடியுமா ? மரணம் வந்து விட்டால் செல்ல முடியுமா?சாமாதி நிலையில் செல்ல முடியுமா ?என்றால் இந்த வழி முறைகளில் செல்ல முடியாது .இதற்கு இறைவன் அனுமதியும் கிடையாது .இதற்கு வள்ளலார் என்ன சொல்கிறார் என்பதை பார்ப்போம் ,

கல்வி இரண்டு வகைப்படும் !

ஒன்று சாகும் கல்வி! ,ஒன்று சாகாக் கல்வி!

சாகும் கல்வி என்பது மாயையால் உண்டாக்கிய ஐம்பூதப் பொருள்களை பலவழிகளில் சம்பாதித்து அனுபவித்து அதனால் வரும் துன்பங்களினால் அச்சம் பயம்,பருவ மாற்றம்,பின் முதிற்சி,பிணி, துன்பம் அடைந்து பின் மரணம் அடைவது சாகும் கல்வியாகும். உலகில் உள்ள அனைத்துக் கல்விகளும் பொருள் ஈட்டுவதற்கு பயன் படும் கல்வியாகும்.இதனால் என்ன பயன் என்றால் ,நம் உடம்பில் உள்ள கண்,காது,மூக்கு,வாய்,மெய் என்னும் உடம்பு,போன்ற இந்திரியங்களும்.மனம்,புத்தி,சித்தம்,அகங்காரம்,என்னும் கரணங்களும் மட்டும் தான் மகிழ்ச்சி அடைகின்றன,ஜீவனும் ஆன்மா என்னும் உள்ஒளி மகிழ்ச்சி அடைவதில்லை.இதற்கு வள்ளலார் சொல்லும் பாடல் வருமாறு --

கரணம் மிகக் களிப்புறவே கடல் உலகும் வானுங்
கதிபதி என்று ஆளுகின்றீர் அதிபதியீர் நீவீர்
மரண பயம் தவிராதே வாழ்வதில் என் பயனோ
மயங்காதீர் உயங்காதீர் வந்திடுமின் நீண்டே
திரணமும் ஓர் ஐந்தொழிலைச் செய்ய வொளி வழங்குஞ்
சித்திபுரம் என ஓங்கும் உத்தம சிற்சபையில்
சரணம் எனக்கு அளித்து எனையும் தானாகக எனது
தனித் தந்தை வருகின்ற தருணம் இது தானே .

என விளக்கம் அளிக்கிறார் .

கடலையும் ,உலகையும் நாட்டையும் ஆளும் அதிபதிகளாக இருந்தாலும்,உங்களுக்கு வரும் மரணத்தைத் தவிர்த்துக் கொள்ள முடியுமா?மரணத்தை தவிர்த்துக் கொள்ளாத வாழ்க்கை ஒரு வாழ்க்கையா?என்று கேட்கிறார் வள்ளலார் .அப்படி வாழ்வதால் என்ன பயன் அடைந்து உள்ளீர்கள்.?உங்கள் வாழ்க்கையில் இந்திரியங்களும் ,கரணங்களும் மட்டும் மகிழ்ச்சி அடைகிறது,ஜீவனோ ,ஆன்மாவோ மகிழ்ச்சி அடைவதில்லை ,ஜீவனும் ஆன்மாவும் மகிழ்ச்சி அடையாத வாழ்க்கை மிருக வாழ்க்கையாகும் மிருகங்களும் உண்ணுகின்றன உறங்குகின்றன பின் இறந்து விடுகின்றன ,அது போலத்தான் மனிதன் வாழ்க்கையா ?மனிதன் அறிவு படைத்தவன் இல்லையா ?சிந்திக்க வேண்டாமா ?உணரவேன்டாமா? மனிதப் பிறப்பு உயர்ந்த பிறப்பு என்பது எல்லாம் ,பொய்யா?அறிவை பயன் படுத்த வேண்டும்,அதுவே மனித பண்பு என்பதாகும் .

சாகும் கல்வி !

உண்ணுவதும் உறங்குவதும் பின் இறப்பதும் சாகும் கல்வியாகும்.நாம் உண்ணுகின்ற உணவு இரைப்பையில் சென்று ஐந்து நாழிகையில் பால் போன்று அரைத்து பிரித்து ஊட்டவேண்டிய அனைத்து உறுப்பு களுக்கும்.நரம்புகளின் வழியாக அனுப்பி வைக்கப் படுகிறது,அதனால் எழுபத்தி இரண்டாயிரம் நாடியும் அக்கிரம மின்றி நிலை பெறுகின்ற படியால் உடல் இயங்கிக் கொண்டு இருக்கிறது .இதை விரிக்கில் பெருகும் .

நாம் உண்ணுகின்ற உணவில் உள்ள சத்தை பிரித்து ரசாயன மாற்றம் போல் ,ரத்தமாகவும் அதில் இருந்து சத்தை பிரித்து விந்து வாக மற்றம் செய்து குண்டலினிப் பைக்குள் அனுப்பிவைக்கிறது .இவை பதினாறு வயதுக்கு மேல் அதன் வேலையை தொடங்குகிறது .இவை ஆணுக்கும் பெண்ணுக்கும் சமமான செயல்களாகும்,இந்த விந்து நாம் உண்ணும உணவுக்கு தகுந்தாற் போல் சுரக்கும் .விந்து விட்டவன் நொந்து கெட்டான் என்பது பழமொழி யாகும்,விந்துவின் ஆதிக்கத்தால் இந்த உலகத்தில் எதை வேண்டுமானாலும் செய்யலாம் ,துணிவையும் உணர்வையும் ,ஊக்கத்தையும் கொடுப்பது விந்து என்னும் திரவம்தான்,உலகில் உண்டாகும் நல்லது கெட்டது அனைத்திற்கும் காரண காரியமாக உள்ளது மனிதனின் விந்து விளக்கமே யாகும்.

இந்த விந்துதான் எல்லா வற்றிற்கும் காரண காரியமாகும் .இதுதான் மண்ணாசை பெண்ணாசை பொன்னாசை போன்ற ஆசைகளை உருவாக்குவதாகும்.இந்த மூன்று ஆசைகளினால் மனிதன் அழிந்து விடுகிறான்,விந்தைக் கட்டுபடுத்தி வெளியே விடாமல் இருந்தால் அருள் கிடைக்கும் என்பதை உணர்ந்தவர்கள் உணவைக் குறைத்து வாழத் தொடங்கினார்கள் ---இதுவே மரணத்திற்கு காரணமாகும் .இதை அறிந்தவர்கள் ஆசையைத் துறக்க வேண்டும் என்கிறார்கள் .ஆசையைத் துறந்தாலும் பசியைத் துறக்க முடியவில்லை--அவற்றை துறந்தவர்கள் துறவிகள்,சந்நியாசிகள் ,சித்தர்கள் யோகிகள் ,ஞானிகள் எனப் படுபவர்களாகும்,

மேலே கண்டவர்கள் சரியை கிரியை யோகம ஞானம் என்னும் படி நிலைகளில் இருந்து இறைவனை அடையலாம் என்று ஒவ்வொருவரும் ஒரு ஒரு வழியைக் கடைபிடித்து வாழ்ந்து வந்துள்ளார்கள் .அவர்கள் முயற்ச்சிக்கு தகுந்தாற் போல் சில,பல சித்துக்கள் கிடைத்து இருக்கிறது .அதனால் அவர்கள் அந்த சித்தை வைத்துக் கொண்டு எல்லாம் கிடைத்து விட்டது போல் இறுமாப்பு அடைந்து,நீண்ட நாள் வாழ்ந்து, மரணத்தை வெல்ல முடியாமல் அழிந்து போய் விட்டார்கள். மரணத்தை வென்றால்தான் இறைவனை அடைய முடியும் என்ற ரகசியத்தை யாரும் கண்டு பிடிக்க வில்லை .

ஏன் என்றால் மரணம் என்பது இயற்கை என்று நினைத்துக் கொண்டு உள்ளார்கள் ,அதனால் உடம்போடு இறைவனை அடையலாம்,என்பது அனைவருடைய கொள்கைகளாகும்,ஆதலால் ஆசைதான் எல்லா வற்றுக்கும் காரணம் ஆசையை ஒழித்து விட்டால்,இறைவன் அருளைக் கொடுத்து விடுவார், இறை நிலையை அடைந்து விடலாம், என்பது சமய மதக் கொள்கைகளின் கோட்பாடுகளாகும்.இவை முற்றிலும் தவறானது என்பதை வள்ளலார் விளக்குகிறார் ,

உடம்பின் ரகசியத்தை தெரிந்து கொள்ளாமல் ,கண்டதே காட்சி ,கொண்டதே கோலம் என்று வாழ்ந்து,கதைகளாகவும்,கற்பனைகளாகவும்,தத்துவங்களை உண்மை போல் அமைத்து வைத்து தாங்களும் குழம்பி மக்களையும் குழம்ப வைத்து விட்டுப் போய் விட்டார்கள்.அதனால் இன்றுவரை மக்கள் உண்மை என்ன வென்று தெரியாமல்,பொய்யையே உண்மை என்று நம்பி வாழ்ந்து கொண்டு வருகிறார்கள் .

மரணம் இயற்கை அல்ல அவை செயற்கை என்பதை வள்ளலார் ,;;தப்பாலே சகத்தவர் சாவே துணிந்தார்'' என்பார் இவை இன்று நேற்று அல்ல என்றும் உள்ளதால் இந்த நோவை நீக்க வேண்டும் என்கிறார் அவர் பதிவு செய்துள்ள பாடல் வருமாறு,

சாவதென்றும் பிறப்பதென்றுஞ் சாற்றுகின்ற பெரும் பாவம் தன்னை எண்ணி நோவது இன்று புதியது அன்றே என்றும் உளதால் இந்த நோவை நீக்கி
ஈவது மன்றிடை நடிப்போய் நின்னாலே யாகும் மற்றை இறைவராலே
ஆவது ஒன்றும் இல்லை என்றால் அந்தோ இச்சிறியே னால்ஆவது என்னே !

என்னும் பாடல் வாயிலாக தெரியப் படுத்தி உள்ளார் .மரணம் என்னும் நோவை நீக்குவது எந்த கடவுளாலும் முடியாது .உடம்பு வந்த வழியும் உயிர் வந்த வழியும் தெரியாமல் ,அதன் ரகசியத்தை தெரிந்து கொள்ளாமல் மரணத்தை வெல்ல முடியாது ,அதற்கு வள்ளலார் பதிவு செய்துள்ள பாடல் வருமாறு ;--

உடம்பு வருவகை அறியீர் உயிர் வகையை அறியீர்
உடல் பருக்க உண்டு நிதம் உறங்குதற்கே அறிவீர்
மடம் புகு பேய் மனத்தாலே மயங்கு கின்றீர் மனத்தை
வசப்படுத்தீர் வசப்படுத்தும் வழி துறை கற்று அறியீர்
இடம் பெரும் பொய் வாழ்க்கையிலே இன்பம் துன்பம் அடுத்தே
எண்ணி எண்ணி இளைக்கின்றீர் ஏழை உலகீரே
நடம்புரி என் தனித் தந்தை வருகின்ற தருணம்
நண்ணியது நண்ணுமினோ புண்ணியம் சார்வீரே !

மனம் என்பது உலக போகத்திலே இட்டுச்செலவது ,அது பேய் குரங்குப் போன்றது அதை வசப படுத்த தெரியாமல் ,வழி துறை தெரியாமல் பொய்யான வாழ்க்கை வாழ்ந்து இன்பம் துன்பம் என்ற அற்ப செயல்களால் அனுபவித்து பின் எண்ணி எண்ணி இளைத்துக் கொண்டு உள்ளீர்கள் , உலகில் உள்ள அனைவரும் ஏழைகள் தான் ,ஒருவரும் பணக்காரன் அல்ல ,மரணத்தை வேல்லுகிறவன் யாரோ அவனே பணக்காரன் என்பதை வள்ளலார் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறார் ,

நாடு ,மொழி,கடவுள்,மதம்,சமயம்,ஜாதி,ஆண்,பெண், உலகப் பொருள்கள்,என்ற எந்தப் பற்றும் இன்றி ,உயிர்களின் உண்மையை அறிந்து உயிரை உண்டாக்கும் ஆன்மாவை,--உண்மை அறிவைக் கொண்டு அறிந்து ஆன்ம நேய ஒருமைப்பாட்டு உரிமை என்னும்,ஒருமை வந்தால் அன்றி ,அறிவு விளக்கம் வெளிப்படாது,அருள் விளக்கம் வெளிப் படாது என்பதை தெளிவுப் படுத்தி உள்ளார்,உலக பற்றை ஒழித்தால் மட்டும் போதாது ,தியானம்,யோகம,தவம்,பக்தி,காயகல்பம், போன்ற செயல்களால் அருளைப் பெற முடியாது,பின் எப்படி பெற முடியும்.

சாகாக் கல்வி !

மரணத்தை வெல்ல முடியும் ! முடியும் !அதற்கு சாகாக் கல்வி என்று பெயர் வைத்துள்ளார் வள்ளல்ளார் .

சாகாத கல்வியே கல்வி ஒன்றே சிவம்
தான் என அறிந்த அறிவே
தகும் அறிவு மலம் ஐந்தும் வென்ற வல்லபமே
தனித்த பூரண வல்லபம்
வேகாத காலாதி கண்டு கொண்டு எப்பொருளும்
விளைய விளைவித்த தொழிலே
மெய்த் தொழில தாகும் இந் நான்கையும் ஒருங்கே
வியந்து அடைந்து உலகம் எல்லாம்
மாகாதல் உற எல்லாம் வல்ல சித்தாகி நிறை
வான வரமே இன்பமாகும்
மன்னுமிது நீ பெற்ற சுத்த சன்மார்க்கத்தின்
மரபு என்று உரைத்த குருவே
தேகாதி மூன்றும் நான் தருமுன் அருள் செய்து எனைத்
தேற்றி அருள் செய்த சிவமே
சிற்சபையில் நடு நின்ற ஒன்றான கடவுளே
தெய்வ நடராஜ பதியே !

சாகாத கல்வி என்பது ஒன்று உண்டு என்பதை முதன் முதலில் கண்டு பிடித்து உலகத்திற்கு அறிமுகப் படுத்தியவர் வள்ளலார் ,கல்வி என்பது மரணத்தை வெல்லும் கல்வியைக் கற்றுக் கொள்வதே சாகாக் கல்வி என்பதாகும்
கடவுள் ஒருவர் என்பதை அறிவதே உண்மை அறிவாகும்,ஐந்து மலமான ஐந்து பூதங்களின் தொடர்பு இல்லாமல் அதை வென்று வாழ்வதே பூரண வல்லபம் என்பதாகும்.என்றும் அழியாமல் வாழ்ந்து அனைத்துப் பொருள்களையும் உருவாக்கும் தொழிலே உண்மையான தொழிலாகும்.கல்வி,அறிவு,வல்லபம் ,தொழில் போன்ற என்றும் அழிவில்லாத செயல்களை செய்யும் செயல் பெற்றதே என்றும் அழியாத இன்பமாகும்.மனிதனாக பிறந்து இந்த உலகத்தில் மேலே கண்ட செயல்களை கண்டு பிடித்து அதன்படி வாழ்ந்து வழிகாட்டியவர் வள்ளலார் ஒருவர்தான் என்பதை நாம் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும் .

எப்படி கண்டு பிடித்தார் ? என்பதைப் பார்ப்போம்.!

இவ்வுலகில் உள்ள அனைத்தும்,உயிர்கள் வாழ்வதற்காக இறைவனால் படைக்கப் பட்டதாகும்.படைக்கப் பட்ட எந்த பொருளையும் அனுபவிக்கலாம் ,அழிக்கக் கூடாது,சேர்த்து வைக்க கூடாது,அளவுக்கு அதிகமாக அனுபவிக்கக் கூடாது .எங்கும் எடுத்து செல்லக் கூடாது,என்பதை அறிந்த வள்ளலார் .அதற்கு மேல் இந்த உடம்பு ஏன் வந்தது ?உயிர் எப்படி வந்தது என்பதை அறிய தொடங்குகிறார்.அப்படி அறியும் போது ,உயிர்களுக்கு இந்த உலகத்தில் வாழ்வதற்கு மூன்று சுதந்திரம்,இறைவனால் கொடுக்கப் பட்டுள்ளது என்பதை அறிந்து கொள்கிறார் ,

அந்த சுதந்திரத்தை மனிதன் எப்படி வேண்டுமானாலும் பயன் படுத்திக் கொள்ளலாம் ,அந்த சுதந்திரத்தை பயன் படுத்தி வாழும் வாழ்க்கையில் இன்பம் துன்பம் தொடர்ந்து கொண்டே வரும் என்பதை உணருகிறார்.நல்லது செய்தால் நல்வினையாகவும்,தீயவை செய்தால் தீவினை யாகவும் ஆன்மாவில் பதிவாகிக் கொண்டே இருக்கிறது, இதுவே பிறப்பு இறப்புக்கு காரண காரியமாக இருந்து கொண்டு உள்ளது என்பதை அறிந்த வள்ளலார் இந்த உலகத்தில் உள்ள எதையும் அனுபவிக்காமல் வாழ்வது எப்படி என்பதை நினைந்து நினைந்து ,உணர்ந்து உணர்ந்து ,அவருடைய அறிவுக்கு அதிகமான வேலைக் கொடுக்கிறார் ,

அறிவை அறிவாலே அறிகின்ற போது உண்மையான அறிவு பதில் சொல்கிறது..அதற்கு வள்ளலார் பதிவு செய்துள்ள பாடல் வருமாறு.

அறிவாலே அறிவினை அறிகின்ற பொழுது அங்கு
அனுபவ மாகின்றது என்னடித் தாயே
செறிவாலே பிறிவாலே தெரியாது தெரியும்
திருவருள் உருவம் என்று அறியாயோ மகளே.

அருளாலே அருள் இறை அருள் கின்ற பொழுது அங்கு
அனுபவம் ஆகின்றது என்னடி தாயே
தெருளாலே மருளாலே தெரியாது தெரியும்
திரு நட இன்பம் என்று அறியாயோ மகளே.!

என்ற பாடல் நமக்கு அறிவை விளக்கும் ,ஆற்றலைக் கொடுக்கும் உண்மையை உணர்த்தும் பாடல்களாகும் .

அருளைப் பெற்றால் மரணத்தை வெல்ல முடியும் என்பதை அறிந்த வள்ளலார் ,அருளைப் பெறுவதற்கு எவை தடையாக இருக்கிறது என்றால் ,இறைவன் நமக்குக் கொடுத்த சுதந்தரத்தை ,நாம் உபயோகப் படுத்தக் கூடாது,வேண்டாம் என்று திருப்பித் தந்து விடவேண்டும் என்பதை வள்ளலார் அருட்பெரும்ஜோதி ஆண்டவரிடம் எப்படி விண்ணப்பம் செய்கிறார் என்பதை அனைவரும் பார்ப்போம் .

ஆறாம் திருமுறையில் முதல் விண்ணப்பம் "'சத்திய விண்ணப்பம் "

எல்லாம் வல்ல தனித் தலைமைக் கடவுளாகிய
அருட்பெரும்ஜோதி ஆண்டவரே !

தேவரீர் திருவருட் சமூகத்தில் யான் செய்து கொள்ளுகின்ற சமரச சுத்த சன்மார்க்க சங்க சத்திய விண்ணப்பம்;--

இவ்வுலகத்தின் இடத்தே ஆறறிவுள்ள உயர்வு உடைத்ததாகிய தேகத்தைப் பெற்ற யான் ,இத்தேகத்திற்கு இடைக்கு இடை நேருகின்ற மரணம்,பிணி,மூப்பு ,பயம்,துன்பம் முதலிய அவத்தைக்கள் எல்லா வற்றையும் நிவர்த்தி செய்து இத்தேகத்தையே நித்திய தேகமாக்கிக் கொண்டு,எக்காலத்தும் ,எவ்விடத்தும்,எவ்விதத்தும்,எத்துணையும்,தடைபடாத பேரின்ப சித்திப் பெருவாழ்வைப் பெற்று வாழ்தல் வேண்டும் என்பதே எனது சத்தியமான அதிதீவிர விருப்ப முயற்சியாக இருக்கின்றது.

எனது விருப்ப முயற்ச்சி இங்கனமாக ,அவத்தைகள் எல்லா வற்றையும் நீக்கி,இத்தேகத்தை நித்திய தேகமாக்கி,எக்காலத்தும் ,அழியாத பேரின்ப சித்திப் பெருவாழ்வைப் பெற்று வாழ்தல்,எதனால் பெறுதல் கூடும் என்று அறியத் தொடங்கிய தருனத்தே;--

வேறு எந்த வழியாலும் பெறுதல் கூடாது,எல்லாம் உடைய கடவுளது திருவருட் சுதந்திரம் ஒன்றாலே பெறுதல் கூடும் என்று தேவரீர் திருவளால் அறிவிக்க உள்ளபடி அறிந்தேன் ,

பின்னர் திருவருட் சுதந்தரம் நமக்கு எந்த வழியால் கிடைக்கும் என்று அறியத் தொடங்கிய தருணத்து.;--

எனது யான் என்னும்,தேக சுதந்தரம்,போக சுதந்தரம்,ஜீவ சுதந்தரம் .என்னும் மூவகைச் சுதந்தரங்களும் நீங்கிய விடத்தே கிடைக்கும் என்று தேவரீர் திருவருளால் அறிவிக்க உள்ளபடி அறிந்தேன்.ஆதலில்,

எனது சுதந்தரமாகக் கொண்டு இருந்த தேக சுதந்தரத்தையும்,போக சுதந்தரத்தையும்,ஜீவ சுதந்தரத்தையும்,தேவரீர் திருவருட்கே சர்வ சுதந்தரமாகக் கொடுத்து விட்டேன் ,கொடுத்த தருணத்தே,இத்தேகமும் ,ஜீவனும்,போகப் பொருள்களும்,சர்வ சுதந்தராகிய கடவுள் பெருங் கருணையால் கொடுக்கப் பெற்றன மன்றி ,நமது சுதந்தரத்தால் பெற்றன அல்ல என்னும் உண்மையை அறிந்து கொண்டேன் .

இனி,இத் தேகத்தினிடத்தும்,ஜீவன் இடத்தும் ,போகப் போருகள் இடத்தும்.தேவரீர் திருவருள் சாட்சியாக எனக்கு எவ்விதத்தும் யாதோர் சுதந்தரத் தோற்றமும் தோற்ற மாட்டாது.

தேவரீர் திருவருட் சுதந்தரத்தை என்னிடத்தே வைத்து அருளி,மரணம்,பிணி,மூப்பு,பயம்,துன்பம் முதலிய அவத்தைகள் எல்லா வற்றையும் தவிர்த்து இத் தேகத்தையே நித்திய தேகமாக்கி,எக்காலத்தும் அழியாத பேரின்ப சித்திப் பெருவாழ்வில் என்னை வாழ்வித்தல்.வேண்டும்.

இத் தேகத்தைப் பெற்ற எல்லாச் சீவர் களுக்கும் எனக்கு அறிவித்த வண்ணமே அறிவித்து அவரவர்களையும் .உரிமை உடையவர்கள் ஆக்கி வாழ்வித்தல் வேண்டும்.

தேவரீர் பெருங் கருணை ஆட்சிக்கு வந்தனம் !வந்தனம் !

மரணத்தை வெல்லுவதற்கு இதைவிட வேறு சாத்தியக் கூறுகள் உண்டா ?தேவையா?சிந்தித்துப் பார்க்க வேண்டும்.வள்ளலாரைப் போல் வாழ்ந்தால் நிச்சயம் மரணத்தை வெல்ல முடியும்.அதை விடுத்து ,எல்லா பற்றுகளையும் விடாமல் வைத்துக் கொண்டு மரணத்தை வெல்ல முடியுமா ?சத்தியமாக முடியாது. பற்றிய பற்று அத்தனையும் பற்று அற விட்டு அருள் அம்பலப் பற்றே பற்றுமினோ என்றும் இறவீரே என்பார் வள்ளலார் .

அருள் !

இந்த உலகம் பொருளினால் உண்டாக்கப் பட்டது,பொருளை வைத்துக் கொண்டு அருளைத் தேடமுடியாது ,அப்படி தேடினாலும் கிடைக்காது .அருளைத் தேடுவதற்கு தடையாக இருப்பது என்ன என்பதை வள்ளலார் விளக்குகிறார் நாம் இதுவரையில் அருளைத் தேடாமல் பொருள் மீது பற்று வைத்து இருந்ததற்கு காரணம் ,

நாம் இதுவரையில் பார்த்தும் கேட்டும் லஷியம் வைத்துக் கொண்டு இருந்த வேதம்,ஆகமம்,புராணம்,இதிகாசம்,முதலிய கலைகள் எதனினும் லஷியம் வைக்க வேண்டாம் ,ஏன் என்றால் அவைகளின் ஒன்றிலாவது தெய்வத்தை இன்னபடி என்றும் தெய்வத்தின் உடைய உண்மை இன்னதென்றும் கொஞ்சமேனும் புறங்கவியைச் சொல்லாமல் மண்ணைப் போட்டு மறைத்து விட்டார்கள்.அணு மாத்திரமேனும் தெரிவிக்காமல் பிண்ட லஷ்ணத்தை ஆண்டத்தில் காட்டினார்கள்.யாதெனில், கைலாசபதி என்றும்,வைகுண்டபதி என்றும்,சத்திய லோகாதிபதி என்றும் பெயரிட்டு இடம்,வாகனம்,ஆயுதம் வடிவம் ரூபம் முதலியவையும் ஒரு மனுஷியனுக்கு அமைப்பது போல் அமைத்து உண்மையாக இருப்பதாகச் சொல்லி இருக்கின்றார்கள்.

தெய்வத்துக்குக் கை,கால் முதலியன இருக்குமா ?என்று கேட்பவர்க்குப் பதில் சொல்லத் தெரியாது விழிக்கின்றார்கள்.இஃது உண்மையாக இருப்பதாகவே முன்னும் பின்னும் உள்ள பெரியவர்கள் என்று பெயரிட்டுக் கொண்டு இருந்தவர்களும் ,உண்மையை அறியாது அப்படியே கண்ணை மூடிக் கொண்டு உளறி இருக்கிறார்கள்,ஆனால் ஆதியிலே இதை மறைத்தவன் ஓர் வல்லவன் ,அவன் மறைத்ததை இதுவரைக்கும் ஒருவரும் கண்டபாடில்லை ,

அவன் பூட்டிய பூட்டை ஒருவரும் திறக்கவில்லை,இதுவரைக்கும் அப்படிப் பட்டவன் பூட்டிய பூட்டை உடைக்க ஒருவரும் வரவில்லை அவைகளில் ஏகதேச கர்ம சித்திகளைக் கற்பனைகளாகச் சொல்லி இருக்கின்றார்கள் ,அதற்காக அவற்றில் லஷியம் வைத்தால் ஆண்டவர் இடத்தில் வைத்துக் கொண்டு இருக்கிற லஷியம் போய் விடும் அவைகளில் லஷியம் வைக்காமல் ஆண்டவர் இடத்திலே லஷியம் வைக்க வேண்டியது நமது விருப்ப முயற்சியாக இருக்க வேண்டும் ,

மரணத்தை வெல்லும் அருளைக் கொடுக்க கூடியவர் உண்மைக கடவுளான அருட்பெரும்ஜோதி ஆண்டவர் ஒருவரால்தான் முடியும் .அதற்கு சாஷி நானே இருக்கிறேன் ,நான் முதலில் சைவ சமயத்தில் லஷியம் வைத்துக் கொண்டு இருந்தது இவ்வளவு அவ்வளவு என்று சொல்ல முடியாது அந்த லஷியம் எப்படிப் போய் விட்டது பார்த்தீர்களா ?நான் பாடி இருக்கிற திருஅருட்பாவில் அடங்கி இருக்கிற பாடலையும் மற்றவர்கள் பாடலையும் சபைக்குக் கொண்டு வந்தால் அவைகளே சாஷி சொல்லிவிடும்.ஏன் அவ்வளவு மிகுந்த அழுத்தம் எனக்கு அப்போது இருந்தது என்றால் ,அப்போது எனக்கு அவ்வளவு அற்ப அறிவாக இருந்தது.என்பதை வெளிச்சம் போட்டுக் கட்டுகிறார் .

காரணம் என்ன ? அவைகள் பக்தி மார்க்கம்,வள்ளலார் கண்டது அருளைப் பெரும் ஞான மார்க்கம் .ஞானம் என்பது ஒன்றும் இல்லாதது.ஒன்றும் இல்லாமல் இருந்தால்தான் அருள் என்னும் ஞானம் கிடைக்கும்.மேலும் வள்ளலார் சொல்லியது.

இப்போது அருட்பெரும்ஜோதி ஆண்டவர் என்னை ஏறாத நிலைமேல் ஏற்றி இருக்கின்றார் .இப்போது எல்லா வற்றையும் விட்டு விட்டதினால் வந்த லாபம் இது.ஆதலால் நீங்களும் விட்டு விட்டீர்களானால் என்னைப் போல் பெரிய லாபத்தைப் பெறுவீர்கள்.இதுவரைக்கும் விடாமல் வைத்துக் கொண்டு இருந்தவர்கள் ஏதாவது லாபத்தைப் பெற்றுக் கொண்டார்களா ?என்றால் பெற்றுக் கொள்ளவில்லை.என்னை மேலே ஏற்றிவிட்டது யாதெனில்.

உண்மை பெருநெறி ஒழுக்கமும் கருணையும் தான் என்னை ஏற்றிவிட்டது உண்மை பெருநெறி ஒழுக்கம் யாதெனில்,''கருணையும் சிவமே பொருள் எனக் காணும் காட்சியும் பெருக '' என்றதுதான் என்னை ஏறா நிலைமிசை ஏற்றிவிட்டது .அது யாதெனில் தயவு ,தயவு என்னும் கருணைதான் என்னைத் தூக்கிவிட்டது .அந்த தயவுக்கு ஒருமை வரவேண்டும் அந்த ஒருமை இருந்தால்தான் தயவு வரும் தயவு வந்தால்தான் பெரிய நிலைமேல் ஏறலாம்.இப்போது என்னுடைய அறிவு அண்டம் அண்டங்களுக்கும் அப்பாலும் கடந்து இருக்கின்றது .அது அந்த ஒருமையினால் தான் வந்தது நீங்களும் என்னைப் போல் ஒருமையுடன் இருங்கள் ,அருள் தானே கிடைக்கும்.அருள் கிடைத்தால் மரணத்தை வெல்லலாம்.

அருள் என்பது என்ன ?

அருள் என்பது அருட்பெரும்ஜோதி ஆண்டவரால் எல்லா ஆன்மாக்களிலும் வைக்கப் பட்டுள்ள மாபெரும் பொக்கிஷமாகும்.அவை ஆண்டவருடைய கருணையால் தான் சுரக்கும் .அதை தாங்கும் அளவிற்கு நாம் நம்முடைய உடம்பை தயார் படுத்த வேண்டும் .அருளைத் தாங்கும் அளவிற்க்கு தகுதி உடையவர் யார் என்பதை வள்ளலார் தெரியப் படுத்துகிறார் .

நிந்தை இலார் நெஞ்சகத்தே நிறைந்த பெருந் தகையை
நிலை அனைத்துங் காட்டி அருள் நிலை அளித்த குருவை
என்தையை என் தனித்தாயை என் இரு கண்மணியை
என்னுயிரை என் உணர்வை என் அறிவுள் அறிவை
சிந்தையிலே தனித்து இனிக்கும் தெள்ளமுதை அனைத்தும்
செய்ய வல்ல தனித் தலைமைச் சிவபதியை உலகீர்
முந்தை மல இருட்டு ஒழிய முன்னுமினோ கரண
முடுக்கு ஒழித்துக் கடை மரண நடுக்கு ஒழித்து முயன்றே !

இந்திரியம் கரணம் என்னும் கருவிகள் செயல்படாமல் ஜீவனும் ஆன்மாவில் அடங்கும் போதுதான் அருள் என்னும் அமுதம் சுரக்கும் .{அதாவது ஆபரேஷன் செய்யும் போது வலி தெரியாமல்இருக்க ,மயக்க மருந்து கொடுத்து மயக்க நிலையில் இருப்பது போன்று } அமுதம் சுரக்கும் போது உடம்பின் மாற்றங்கள் என்னவாக மாற்றம் அடையும் என்பதை வள்ளலார் தெரியப் படுத்துகிறார் ,ஊன உடம்பு ஒளி உடம்பாக மாற்றுவதுதான் மரணத்தை வெல்லும் வழியாகும் .அதாவது வேதியல் மாற்றம் போல் .

உடம்பு மற்றம் அடைவதைப் பற்றி வள்ளலார் சொல்லுவதைக் கவனிப்போம்!

தோல் எலாங் குழைந்திடச் சூழ் நரம்பு அனைத்தும்
மேல் எலாங் கட்டவை விட்டு விட்டு இயங்கிட
என்பு எலாம் நெக்கு நெக்கி இயல் இடை நெகிழ்ந்திட
மென்புடைத் தசை எலாம் மெய்யுறத் தளர்ந்திட
இரத்தம் அனைத்தும் உள் இறுகிடச் சுக்கிலம்
உரைத்திட பந்தித் தொரு திரளாயிட
மடல் எலாம் மூளை மலர்ந்திட அமுதம்
உடல் எலாம ஊற்று எடுத்து ஓடிநிரம்பிட
ஒண்ணுதல் வியர்த்திட ஒளிமுகம் மலர்ந்திடத்
தண்ணிய உயிர்ப்பினிற் சாந்தம் ததும்பிட
உண்ணகை தோற்றிட உரோமம் பொடித்திடக்
கண்ணில் நீர் பெருகிக் கால் வழிந்து ஓடிட

வாய் துடித் அலறிட வளர் செவித் துணைகளில்
கூயிசைப் பொறி எலாங் கும்மெனக் கொட்டிட
மெய் எலாங் குளிர்ந்திட மென் மார்பு அசைந்திடக்
கை எலாங் குவிந்திடக் கால் லெலாஞ் சுலவிட
மனங் கனிந்து உருகிட மதி நிறைந்து ஒளிர்ந்திட
இனம் பெறு சித்தம் இயைந்து களித்திட
அகங்காரம் ஆங்காங்கே அதிகரிப்பு அமைந்திடச்
சகங் காண உள்ளம தழைத்து மலர்ந்திட
அறிவுருவு அனைத்தும் ஆனந்தம் மாயிடப்
பொறியுறு மான் மதற் போதமும் போயிடத்

தத்துவம் அனைத்தும் தாமொருங்கு ஒழிந்திடச்
சத்துவம் ஒன்றே தனித்து நின்று ஓங்கிட
உலகம் எலாம் விடயமும் உளவு எலாம மறைந்திட
அலகிலா அருளின் ஆசை மேற் பொங்கிட
என்னுளத்தே எழுந்து உயிர் எல்லாம் மலர்ந்திட
என்னுளத்தே ஓங்கிய என் தனி அன்பே !

பொன்னடி கண்டு அருள் புத்தமுத உணவே
என்னுளத்தே எழுந்த என்னுடைய அன்பே
தன்னையே எனக்குத் தந்து அருள் ஒளியால்
என்னை வேதித்த என் தனி அன்பே !

அருள் என்னும் அமுதம் சுரக்கும் போது உடம்பு எப்படி வேதியல் மாற்றம் உண்டாகிறது என்பதை மிகத் தெளிவாக வள்ளலார் தெரியப் படுத்தி உள்ளார். இந்த உலகத்தில் யாராவது என்னைப் போல்,மரணம் இல்லாப் பெருவாழ்வு பெற்று இருக்கிறார்களா என்பதை அருட்பெரும்ஜோதி ஆண்டவர் இடத்தில் கேட்கிறார்.

நோவாது நோன்பு எனைப்போல் நோற்றவரும் மெஞ்ஞான்றும்
சாகா வரம் எனைப் போற் சார்ந்தவரும் --தேவா நின்
பேர் அருளை என்போலப் பெற்றவரும் எவ்வுலகில்
யார் உளர் நீ சற்றே யறை !

மரணத்தை வென்ற மாபெரும் மகான் நமது வள்ளல்பெருமான் அவர்கள்,அருட்பெரும்ஜோதி ஆண்டவரைப் பார்த்து கேட்கும் கேள்விக்கு ஆண்டவர் என்ன பதில் சொல்கிறார் என்பதைப் பார்ப்போம் .

துன்பெலாம் தீர்ந்தன சுகம் பலித்தது நினைச்
சூழ்ந்த அருள் ஒளி நிறைந்தே
சுத்த சன்மார்க்க நிலை அனுபவம் நினக்கே
சுதந்தரம் ஆனது உலகில்
வன்பெலாம் நீக்கி நல் வழி எலாம் ஆக்கி மெய்
வாழ் வெலாம் பெற்று மிகவும்
மன்னுயிர் எலாம் களித்திட நினைத்தனை உன்றன்
மனம் நினைப்பின் படிக்கே
அன்ப நீ பெருக உலவாது நீடுழி விளை
யாடுக அருட்ஜோதியாம்
ஆட்சி தந்தோம் உனைக் கைவிடோம் கைவிடோம்
ஆணை நம் ஆணை என்றே
இன்புறத் திருவாக்களித்து என் உள்ளே கலந்து
இசைவுடன் இருந்த குருவே
எல்லாஞ் செய் வல்ல சித்தாகி மணி மனிறில்
இலங்கு நடராஜ பதியே !

என்ற பாடல் மூலமாக விளக்கம் அளிக்கிறார் வள்ளலார் .
உலகம் இதுவரையில் உண்மை அறியாமல் இருந்தது ,ஆதலால் எனக்கு துன்பம் இருந்தது ,அந்த துன்பங்கள் யாவும் உன்னால் தீர்ந்து விட்டது,நீ ஒருவன் தான் என்னுடைய செல்வப் பிள்ளை,நல்லப் பிள்ளை ,தாவரங்களும் துன்பம் இல்லாமல் வாழ வேண்டும் என்று வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடிய உனக்கு ,உன் மன நினைப்பின் படிக்கே அன்பையும் அருளையும் பெற்று ,நீடுழி காலம் விளையாடி மகிழ வேண்டும். ஆதலால் என்னுடைய ஆட்சியை உன்னிடம் ஒப்படைக்கிறேன் என்று,அருட்பெருஞ்சோதி ஆண்டவர் வள்ளலார் வசம் ஆட்சியை ஒப்படைத்து விடுகிறார் ,உனை என்றும் கைவிடாமல் உன்னுடனே இருப்பேன் இது நம் இருவருடைய ஆணையாகும் என்று மகிழ்ச்சி யுடன் வாக்களித்து உள்ளார் அருட்பெருஞ்சோதி ஆண்டவர் .

இதைவிட பெரிய பேறு உலகத்தில் யாருக்காவது கிடைத்தது உண்டா ?மரணத்தை வென்றால் மட்டும் போதாது அதற்கு உண்டான தகுதியும் வேண்டும் .''அருளாட்சி பெரும்'' அந்த தகுதியை வள்ளல் பெறுமான் பெற்று உள்ளார் .

நமது உடம்பு தாயின் கருப்பையில் அணுக்களின் கூட்டு சேர்க்கையால் பூத காரிய அமுதத்தினால் {அணுவை ஒட்டும் பசையால்} பின்னப் பட்டதாகும் ,அந்த உடம்பை பிரிக்க வேண்டும்,வேறு எதைக் கொண்டும் பிரிக்க முடியாது .அருட்பெரும்ஜோதி ஆண்டவர் ,நம் ஆன்மாவில் உள்ள அமுதத்தை எப்போது வெளிப் படுத்து கிறாரோ அப்போதுதான்,அந்த அருள் அமுதத்தால் ---பூத காரிய அமுதத்தால் பின்னப்பட்ட அணுக்களை பிரிக்க முடியும்,அப்போது ஊன உடம்பு ஒளி உடம்பாக மாறும் .இதுவே மரணத்தை வெல்லும் வழியாகும் ,இன்னும் விரிக்கில் பெருகும் என்பதால் இத்துடன் நிறைவு செய்கிறேன் .

மரணத்தை வெல்ல முடியும் இதில் எந்தவித சந்தேகமும் தேவை இல்லை .மனிதர்களாக பிறந்தவர்கள் மரணத்தை வென்று இறைவனை அடைவது தான் மனிதர்களின் இறுதி நிலையாகும் .அதைத்தான் வள்ளலார் கடவுள் நிலை அறிந்து அம்மயமாதல் என்பார்! ,மரணம் இல்லாப் பெருவாழ்வு என்பார்! ,பேரின்ப பெருவாழ்வு என்பார் ! பேரின்ப சித்திப் பெருவாழ்வு என்பார் !

மனிதனாக வாழ்ந்து பின் மரணத்தை வெல்வோம் !
 

Tuesday, June 12, 2012

பணம்

 
பணம் இருந்தால் உன்னை உனக்குத் தெரியாது. பணம் இல்லாவிட்டால், யாருக்கும் உன்னைத் தெரியாது.
__________-ஸ்மித்.

பணக்காரனாய் சாக வேண்டும் என்பதற்காக வறுமையில் வாழ்வது வடிகட்டிய முட்டாள்தனம்
... ___________- ஜீவெனால்.

பணக்காரன் ஆக வேண்டுமா? அதற்குப் பணத்தைக் குவிக்க வேண்டியது இல்லை. தேவைகளைக் குறைத்துக் கொள். _______-வீப்பர்.

 நாம் பணக்காரர்களாக இருக்க கடமைப்பட்டிருக்கவில்லை. ஆனால் ஒழுக்கமுள்ளவர்களாக இருக்கக் கடமைப்பட்டிருக்கிறோம். ___பெர்னார்ட்ஷா.

பணப்பிரச்சனை என்றால், எல்லோரும் ஒரே மதத்தினர்தான். ____- வால்டேர்.

பணம் ஒன்றே வாழ்வின் இலட்சியம் என்றால் அது தவறான வழியிலேதான் தேடப்படும். ____ரஸ்கின்.

பணத்திற்குக் கடல் நீரின் குணம் ஒன்று உண்டு. கடல் நீரைக் குடிக்கக் குடிக்கத் தாகம் அதிகமாகும்.
______- ஷோப்பன் ஹொபர்.

சிலர் பணத்தை வெறுப்பதாகக் கூறுவர். ஆனால், அவர் வெறுப்பது பிறரிடமுள்ள பணத்தை!
________- கோல்ட்டஸ்.



 பணம் தலைகுனிந்து பணியாற்றும் அல்லது தலைகுப்புறத் தள்ளிவிடும்.
______- ஆலிவர் வெண்டல்.

பணத்தைச் சம்பாதிக்க வேண்டும் என்பதற்காக ஒழுக்கத்தை விற்று விடாதே.
____- தாமஸ் பெயின்.
பணத்தின் உண்மையான மதிப்பு பிறரிடம் கடன் கேட்கும் போதுதான் தெரியும்.
________- பிராங்க்ளின்.

பணமும் இங்கித நடவடிக்கையும் ஒரு கனவானை உருவாக்குகின்றன.
_______ - தாமஸ் புல்லர்.

பணத்தை அடிக்கடி குறை கூறுவார்கள். ஆனால் அதை யாரும் மறுப்பதில்லை
_____- டென்மார்க் பழமொழி.

பணத்தை வைத்திருப்பவனுக்குப் பயம். அது இல்லாதவனுக்குக் கவலை
____- பாரசீகப் பழமொழி.

பணமும் மகிழ்ச்சியும் பரம விரோதிகள். ஒன்றிருக்குமிடத்தில் மற்றொன்று இருப்பதில்லை
- ___ஆஸ்திரேலியாப் பழமொழி.




 

தனியாக இருக்கும் போது மாரடைப்பு வந்தால் உங்களை நீங்களே எப்படி காப்பாற்றிக்கொள்வது ??


மாலை மணி 6:30,வழக்கம் போல் அலுவலகப் பணிகளை முடித்து விட்டு வீட்டிற்கு தனியாக சென்று கொண்டிருக்கிறீர்கள் . அலுவலகத்தில் வேலை பளுவின் காரணமாக, மற்றும் இதர சில பிரச்சனைகள் காரணமாக உங்கள் மனம் மிகவும் அழுத்தத்துடன் உள்ளது, நீங்கள் மிகவும் படபடப்பாகவும், தொய்வாகவும் உள்ளீர்கள் , திடீரென்று உங்கள...் இதயத்தில் அதிக வலி ஏற்படுவதை உணர்கிறீர்கள்.

அந்த வலியானது மேல் கை முதல் தோள்பட்டை வரை பரவுவதை உணருகிறீர்கள் , உங்கள் வீட்டில் இருந்து மருத்துவமனை ஒரு ஐந்து மைல் தூரத்தில் இருப்பதாக வைத்துக்கொள்வோம், ஆனால் உங்களால் அந்த ஐந்து மையில் தூரத்தை கடக்க முடியாது என உங்கள் மூளை உங்களுக்கு சொல்கிறது இந்த நேரத்தில் நம் உயிரை நாமே காக்க என்ன செய்யலாம் ??
துரதிஷ்ட வசமாக மாரடைப்பு ஏற்படும் போதெல்லாம் இறப்பவர்கள் அதிகமாக தனியாக இருந்திருப்பவராக உள்ளனர் ! உங்கள் இதயம் தாறுமாறாக துடிக்கிறது..நீங்கள் சுயநினைவை இழக்க வெறும் 10 நொடிகள் தான் உள்ளது. இப்போது நீங்கள் செய்ய வேண்டியது தொடர்ச்சியாக மிக ஆக்ரோஷமாக இரும்ப வேண்டும், ஒவ்வொரு முறை இரும்புவதர்க்கு முன்னரும் மூச்சை இழுத்து விட வேண்டும் , இருமல் மிக ஆழமானதாக இருக்க வேண்டும்.

இருதயம் இயல்பு நிலை திரும்பும் வரையிலோ அல்லது வேறொருவர் உதவிக்கு வரும் வரையிலோ ஒவ்வொரு இரண்டு நொடிக்கும் மூச்சை இழுத்து விட்டு இரும்முக்கொண்டே இருக்க வேண்டும். மூச்சை இழுத்து விடுவதினால் நுரை ஈரலுக்கு ஆச்சிஜன் சீராக செல்ல வழி வகுக்கிறது , இருமுவதால் இருதயம் நிற்பதில் இருந்து தொடர்ச்சியாக துடித்துக்கொண்டே இருக்க உதவும், இதனால் ரத்தஓட்டம் சீரடையும்.

இருமுவதால் ஏற்படும் அதிர்வினால் இதயம் சீராக துடிக்கும்..பின்னர் இருதயம் சீரடைந்ததும் அருகில் உள்ள மருத்துவமனைக்கு செல்லலாம்..இந்த தகவலை குறைந்தது உங்களின் பத்து நண்பர்களுக்காவது பகிருங்கள்..தேவை இல்லாத விசயங்களையும், ஜோக்குகளையும் பகிர்வோர் , உயிரை காக்கும் இது போன்ற விசயங்களையும் பகிருங்கள்....

Sunday, June 10, 2012

ஆஸ்துமா

இது ஒரு பரம்பரை நோயாகவும் வரலாம் அல்லது நோய் எதிர்ப்புச்சக்தி இல்லாத காரணத்தினாலும் வரலாம். இந்நோய்க்கும் காச நோய்க்கும் அதிக வேறுபாடுகள் உண்டு. ஒவ்வாமை காரணமாகவே இந்நோய் ஏற்படுகிறது. ஆஸ்துமா ஏற்படுவதற்கான குறிப்பிட்ட காரணங்கள் இது...வரை கண்டுபிடிக்கப்படவில்லை.

அறிகுறிகள்:
மேல் மூச்சு வாங்குதல், தொடர் சளி, இருமல் ஆகியவை அறிகுறிகள் ஆகும்.

காரணங்கள்:
தூசி, தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் வேதி- கழிவுப் பொருட்கள் சூழ்ந்துள்ள இடங்களில் வசிப்பது, பூச்சிக்கொல்லி மருந் துகள், வாகனப் புகை, சில மாத்திரைகள் ஆகியவை மூலம் ஒவ்வாமை ஏற்பட்டு ஆஸ்துமா வரலாம்.

மூலிகைகள்:
வேப்பிலை, வில்வம், துளசி, அத்தி மற்றும் தும்பையிலை, ஆடுதொடா, தூதுவளை, முருங்கையிலை ஆகியவை ஆகும்.

இவை அனைத்தையும் பறித்துவந்து வெயிலில் உலர்த்தி பொடி செய்து சமஅளவு ஒன்றாகக் கலந்து பின் காற்றுப்புகாத பாட்டிலில் நிரப்பி வைத்துக்கொள்ள வேண்டும்.
 பின் இவற்றில் இருந்து ஒரு ஸ்பூன் தூள் எடுத்து ஒரு தம்ளர் தண்ணீரில் கலந்து உணவுக்கு ஒரு மணி நேரம் முன்பாக தினமும் காலை, பகல், இரவு ஆகிய மூன்று வேளைகளும் உட்கொள்ள வேண்டும். இதனை சுமார் நான்கு முதல் ஆறு மாதங்கள் வரை உட் கொண்டால் பூரணகுணம் பெறலாம். முதல் மாதத்திலேயே ஓரளவு குணம் தெரிய ஆரம்பிக்கும்.

பிளஸ் 2 தேர்வில் பள்ளியில் முதலிடம் பிடித்துள்ள, இரண்டே முக்கால் அடி உயரமுள்ள, மாற்றுத் திறனாளி பிரியா

 
என் சொந்த ஊர், பெரம்பலூர் மாவட்டம், மாவலிங்கை கிராமம். என் அப்பா விவசாயக் கூலி. எப்பொழுதாவது தான் வேலை கிடைக்கும். அதனால் வருமானம் குறைவு தான். நான் பிறக்கும் போதே, மிகக் குறைந்த உயரத்துடன் பிறந்தேன். நான்கு வயதான போதும், உடல் வளர்ச்சியில்ல...ாததால், பதறிப்போன என் பெற்றோர் மருத்துவர்களிடம் சென்று காட்டியபோது, இது பிறப்பின் இயல்பு என்பதால் இந்தக் குறைபாட்டை சரி செய்ய முடியாது என்றனர். ஆனால் என் குறையை எண்ணி பெற்றோர் கவலைப்படாமல், என்னை படிக்க வைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.எங்கள் கிராமத்தில் உள்ள பள்ளியிலேயே, என்னை சேர்த்து விட்டனர். நான் நன்றாகப் படித்து, ஆசிரியர்களின் பாராட்டுக்களைப் பெற்றதைப் பார்த்த என் பெற்றோருக்கு, என்னை மேலும் படிக்க வைக்க வேண்டும் என்ற ஆசை வந்தது. பின் செட்டிகுளம் அரசு மேல் நிலைப் பள்ளியில் சேர்த்து விட்டனர். ஆறாம் வகுப்பிலிருந்து, பிளஸ் 2 வரை விடுதியில் தங்கிப் படித்தேன். குடும்ப சூழ்நிலையை மனதில் வைத்து, இரவு பகல் பாராமல் படித்து, பிளஸ் 2வில், 1,040 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதல் மாணவியாக தேர்ச்சி பெற்றேன். அப்பா விவசாயக் கூலி என்பதால், எதையும் சேர்த்து வைக்க முடியாமல், குடும்பச் செலவிற்கும் நான், என் தம்பி, தங்கை மூன்று பேரின் படிப்புச் செலவிற்கும் சிரமப்பட்டு தினம் வறுமையுடன் போராடிக் கொண்டிருக்கிறார். நான் நன்றாகப் படித்து சாப்ட்வேர் இன்ஜினியர் ஆக வேண்டும் என்பது தான் என் எதிர்கால லட்சியம். தமிழ் வழியில் படித்திருந்தாலும் ஆங்கிலம் சரளமாகப் பேசுவேன், எழுதுவேன். குள்ளமாக இருப்பதைப் பார்த்து பலர் என்னை கிண்டல் செய்துள்ளனர். அதை பெரிதுபடுத்தி வருத்தமடையாமல் எனக்குள் மன எழுச்சியை வளர்த்துக் கொண்டேன்.

பிளஸ் 2 தேர்வில் பள்ளியில் முதலிடம் பிடித்துள்ள, இரண்டே முக்கால் அடி உயரமுள்ள, மாற்றுத் திறனாளி பிரியா,


யூகோஸ்லாவியா நாட்டில் ஸ்கோப்ஜி என்ற சிறு கிராமத்தில் ஓர் எளிய குடும்பத்தில் பிறந்தவர் தெரசா. பிறந்தது 1910-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 27-ஆம் நாள். இளம்வயதிலேயே தந்தையை இழந்தவர். தாயால் வளர்க்கப்பட்டவர். 1929-ல் இந்தியாவிற்...கு வந்தார். லோரட்டோ மடத்தின் கொல்கல்கத்தா கிளையில் இருந்து கொண்டு பள்ளிக்கூடமொன்றில் ஆசிரியையாகப் பணியாற்றினார். அன்னை வசதியற்ற வீட்டுப் பிள்ளைகளுக்குத்தாமே கல்வி கற்பித்திருக்கிறார். ஆதரவற்ற முதியோர்களுக்கு அடைக்கலம் தந்திருக்கிறார். நோய்வாய்ப்பட்டு இறக்கும் தருவாயில் இருந்தவர்களைத் தத்தெடுத்து அவர்கள் நிம்மதியாய் மரணத்தை ஏற்கச் செய்வதற்காக `நிர்மல் இதயம்' என்ற ஆசிரமத்தை ஏற்படுத்தினார். அன்னை அறிவார் மனிதனின் முதல் தேவை அன்புதான் என்பதை. அதனால்தான் அவர் தொழு நோயாளிகளுக்கும், எய்ட்ஸ் நோயாளிகளுக்கும் சேவையை விரிவுபடுத்தினார். தொழு நோயாளிகளுக்கு என்று `ப்ரேம் நிவாஸ்' இல்லம் தொடங்கினார். அன்னையின் தொண்டு இந்தியாவோடு நின்றுவிடவில்லை. ஆஸ்திரேலியா, வெனிசுலா, கொலம்பியா, ரோம், பொலிவியா, ஜோர்டான், ஏமன் ஆகிய நாடுகளிலும் கிளை விரித்திருக்கிறது. தமது வாழ்வின் ஒவ்வொரு நாளையும் மற்றவர்களின் நலனுக்காகவே செலவிட்ட அன்னை 1997-ஆம் ஆண்டு செப்டம்பர் 5ஆம் நாள் மரணமடைந்தார். 1962-ல் பத்மஸ்ரீ விருது, 1962-ல் பிலிப்பைன்ஸ் நாட்டின் மிக உயர்ந்த விருதான `ராமோன் மக்ஸேஸே' விருது, 1971-ல் போப் ஆண்டவரின் உலக சமாதானப் பரிசு, அமெரிக்காவின் `நல்ல சாமரித்தான்' விருது, 1972-ல் சர்வதேச நேரு சமாதானப் பரிசு, 1976-ல் சாந்தி நிகேதனில் டாக்டர் பட்டம் இவை அன்னை பெற்ற விருதுகளில் குறிப்பிடத்தக்கவை. இந்திய அரசு அவருடைய நினைவாய் தபால் தலை வெளியிட்டிருக்கிறது. 1980-ல் `பாரத ரத்னா' விருது வழங்கிக் கவுரவித்தது. அன்னை தெரசாவின் பணியைப் போற்றும் விதமாய் உலக அமைதிக்கான நோபல் பரிசு (1979) வழங்கப்பட்டது. வாட்டிகன் நகரம் `புனிதர்' பட்டத்தை சமீபத்தில் வழங்கியது அவருக்குக் கிடைத்த மிகப்பெரிய கவுரவம்.

பிழைக்கத் தெரிந்தவன் !-(பிரமோஷன் வாங்க ஏழு ஐடியாக்கள்)


1. மேசையை எப்போதும் களேபரமாக வைத்திருங்கள். ஐந்தாறு பைல்கள் திறந்து கிடக்க வேண்டும். நடுவில் பேனாவைத் திறந்து போட்டிருக்க வேண்டும். மேசையின் இழுப்பறைகள் பாதி திறந்திருக்க வேண்டும். சாவி தொங்கிக் கொண்டிருக்க வேண்டும்.
...
2. போனில் உரக்க பேசுங்கள். ‘ஐ சிம்ப்ளி கேன்னாட் டாலரேட் தட்’,டுமாரோ வில் பீ டூ லேட்’, என்கிற மாதிரி வாக்கியங்களை அழுத்தம் திருத்தமாக உச்சரியுங்கள். ஆங்காங்கே கொஞ்சம் ஹிந்தி, மலையாளம் கலந்து பேசுவது குணச்சித்திரத்தை மேம்படுத்தும். எதிராளியைக் காய்ச்சி வடிகட்டுற மாதிரி பேசுங்கள். இதைச் செய்கிற போது எதிர் முனையில் போன் வைக்கப் பட்டுவிட்டது என்பதை நிச்சயித்துக் கொண்டு செய்வது உடம்புக்கு நல்லது.

3. அலுவலகத்துக்குள் எப்போது நடந்தாலும் ஏதோ தீ விபத்து நடந்து விட்டது மாதிரி வேகமாக நடவுங்கள். நீங்கள் போவது கேன்டீனுக்கு மசால் வடை சாப்பிடவோ கூட இருக்கலாம்.

4. மேற்சொன்ன தீ விபத்து நடைகளின் போது கையில் எப்போதும் ஒரு பைலோ, ரெஜிஸ்டர் புக்கோ வைத்திருங்கள். அது காலி பைலாகவோ, அந்த ரிஜிஸ்தர் உங்கள் மகனின் மேப் டிராயிங் நோட்டாகவோ கூட இருக்கலாம்.

5. சாயந்திரம் ஐந்தரைக்குப் பிறகு உங்கள் பாஸின் கேபினுக்கு முன்னால் குறுக்கும் நெடுக்கும் சும்மாவாவது நடவுங்கள்.

6. ஒரு வேளை அவர் ஏற்கனவே கிளம்பியிருந்தால் அவர் நம்பருக்கு போன் செய்து உப்புப் பெறாத விஷயம் எதற்காவது ஐடியா கேளுங்கள். ‘ஆர் யு ஸ்டில் இன் தி ஆபிஸ்?’ என்று கேட்க வையுங்கள். அதற்கு பதிலாக, ‘யுஷுவலா கிளம்பற நேரமே இன்னம் வரல்லை சார்’ என்கிற ரீதியில் பதில் சொல்லுங்கள். முடிந்தால், ‘கேசவன் வேறே இன்னைக்கு வரல்லையா, நாளைக்கு ஆடிட் இருக்கே… என்கிற மாதிரி யாரையாவது டிப்ளமேடிக்காக போட்டுக் கொடுங்கள்.

7. அடுத்த நாள் பாஸுடன் பேசும் போது சம்பந்தமே இல்லாமல் ‘நேத்து கூட சாயந்திரம் ஆறரை மணி இருக்கும், வெப் இந்தியா ஆளுங்க போன் பண்ணாங்க’ என்கிற மாதிரி அப்டேஷன்கள் கொடுங்கள். ஆறரை, ஏழு என்கிற இடங்களில் இழுத்து இழுத்து பேசுங்கள்'.

க‌டைசியில் இதை மறந்து விடாதீர்க‌ள் ...!!!

பிரமோஷன் கிடைதால் என்னை ம‌றந்து விடாதீர்க‌ள் ... (:-)

Wednesday, May 30, 2012

Facebook சமூக தளம்

Facebook சமூக தளம் வெறும் பொழுதுபோக்குக்கானது என்ற நிலையிலிருந்து விடுபட்டு, வேறு பல புதிய சேவைகளையும் தரத் தொடங்கியுள்ளது.

அவ்வகையில் தற்போது விலை மதிப்பற்ற மனித உயிரைக் காக்கும் புதிய அவதாரத்தை எடுத்துள்ளது. Facebook உறுப்பினர்கள் உடலுற...ுப்பு தானம் செய்ய முன்வருபவர்களாக இருந்தால், அந்த தகவலை அவர்களது தளத்தின் முதல் பக்கத்தில் குறிப்பிட வேண்டும் என Facebook நிறுவனரும் தலைமை அதிகாரியுமான மார்க் ஜக்கர்பர்க் வேண்டுகோள் விடுத்துள்ளார். சிறுநீரகம் உள்ளிட்ட மாற்று உறுப்புக்கள் கிடைக்காததால் அமெரிக்காவில் ஒவ்வொரு நாளும் 18 பேர் இறக்கின்றனர் என்ற செய்தி தன்னை கவலை அடைய வைத்ததாகவும், இதை மாற்றுவதற்காகவே புதிய வசதியை Facebook மூலம் தர உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இதற்கு வசதியாக, சிறுநீரகங்கள் உள்ளிட்ட உறுப்புகளை தானம் பெற்று பாதுகாத்து வைக்கும் நிறுவனங்களைத் தொடர்பு கொள்வதற்கான இணைப்பும் இத்தளத்தின் மூலமாகவே பெற முடியும். ஜக்கர்பர்க்கின் இந்த வேண்டுகோள் வெளியாகி, ஒரு சில நாளிலேயே பெரும் வரவேற்பு கிடைக்க தொடங்கியுள்ளது. இண்டியானாபொலசில் உள்ள ஒரு நிறுவனத்தில், ஒரே நாளில் ஆயிரத்து 400 பேர் சிறுநீரக தானம் தருவதாக பதிவு செய்துள்ளனர். அமெரிக்காவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த சேவைக்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், இந்த நடைமுறை இந்தியா உள்ளிட்ட மற்ற நாடுகளிலும் விரைவில் கிடைக்குமானால், இந்தியாவிலும்.... குறிப்பாக, தமிழகத்தில் செங்கல்பட்டைச் சேர்ந்த ஹிதேந்திரன் மரணத்தை ஒட்டி தொடங்கிய உடல்உறுப்பு குறித்த விழிப்புணர்வு அடுத்த கட்டத்தை எட்டும் என நம்பலாம்...
 

கடவுள் எங்கு உள்ளார் ?


கடவுள் எல்லா உயிர்களிலும் உள்ளார் ,அவரைக் காண்பது எப்படி ?மனிதர்களாக பிறந்தவர்கள் மட்டும் தான் கடவுளைக் காண முடியும்.அதற்கு மனிதர்கள் என்ன செய்ய வேண்டும் .மனிதர்கள் உருவாக்கிய தத்துவங்கள் என்னும் உருவங்களை வழிபாடு செ...யவதாலோ ,கடவுள் பெயரால் வாயில்லாத உயிர்களை பலியிடுவதாலோ, உயிர்பலிக் கொடுத்து புலால் உண்பதாலோ ,கடவுளை நினைத்து ,தவம் தியானம்,யோகம ,செய்வதாலோ ,பொருளைக் கொடுத்து கடவுளை வசப்படுத்தவோ ,முடியாது.

கடவுளைப் பற்றி போதிக்கும் அருளாலர்களை வணங்க்குவதாலோ,ஞானிகளை வணங்க்குவதாலோ மற்ற புற செயகையாலோ கடவுளைக் காணமுடியாது கடவுளைப் பற்றிய புத்தகங்களைப் படிப்பதாலோ கடவுளைக் காண முடியாது!

நாம் பல பிறவிகள் எடுத்து மனித பிறவிக் கிடைத்துள்ளது.இந்த உலகத்திற்கு வந்ததில் இருந்து பல உயிர்களின் உதவியால் துணையால் ,ஐந்து பூதங்களின் சேர்க்கையால் பிறந்து பிறந்து,இறந்து இறந்து ,இந்த மனிதப் பிறவிக் கிடைத்து உள்ளது ,அப்படி கிடைத்து வந்த இந்த பிறவியை கடவுள் ஏற்றுக் கொள்வாரா ?என்றால் ஏற்றுக் கொள்ள மாட்டார் .

நாம் என்ன செய்ய வேண்டும் உலகில் உள்ள உயிர்களுக்கு உபகாரம் செய்ய வேண்டும் ,அன்பு,தயவு,கருணை என்னும் செயல்பாட்டில் உயிர்களுக்கு வரும் இடையூறுகளை தவிர்க்க வேண்டும் ,அதுவே ஜீவ காருண்யம் என்பதாகும் .ஜீவ காருண்யம் என்றால் என்ன ?அனைவருக்கும் பொதுவாக உண்டாகும் ,பசி ,பிணி,தாகம் .இச்சை எளிமை,பயம் ,கொலை ,துன்பம் போன்ற துயரங்களை போக்கு கின்றவர்கள் கடவுளைக் காண முடியும் ,அவர்களை கடவுள் அன்புடன் ஆசீர்வாதம் செய்து ஏற்றுக் கொள்வார்

கடவுள் ஒருவரே என்ற உண்மையும் ,கடவுள் ஒளியாக உள்ளார் என்ற உண்மையும்,அவருடைய குழந்தைகள் தான் அனைத்தும் என்ற உண்மையும் ,அப்போதுதான் தெரியும் ஒவ்வொரு உயிரின் உள்ளும் உள் ஒளியாக இருப்பதுவே அதாவது {ஆன்மா }வாக இருப்பதுவே கடவுளாகும் .அதற்கு பெயர் ஜீவ ஆன்மாவாகும் ,ஜீவனில் உள்ள ஒளியைப்பார்த்தால் கடவுளின் பரமானமா என்னும் ஒளி தெரியும் .அப்போது இரண்டாக இருந்த ஒளி ஒன்றாகத் தெரியும் அதுவே கடவுள் நிலை அறிந்து அம்மபயமாதல் என்பதாகும்.இதுவே கடவுளைக் காணும் எளிய வழியாகும் .ஒழுக்கமும் ஜீவ காருண்யமும்,பர உபகாரமும் ,இருந்தால் கடவுளைக் காண முடியும் .இதுவே உண்மை,உண்மை,உண்மை,சத்தியம்,சத்தியம்,சத்தியம்,

முயற்சி செய்தால் ஞானம் என்னும் ஆன்மீக வழி கிடைக்கும் அருள் சுரக்கும் அதன் வழியாக ஆனந்தம் பெருகும் .

 

Sunday, April 29, 2012

கோச்சடையான் பட அனுபவம்: உற்சாகத்தில் ஆதி

ரஜினி நடிக்கும் கோச்சடையானின் முதற் கட்ட படப்பிடிப்பு லண்டனிலும், இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தற்போது கேரளாவிலும் நடந்து வருகிறது.
இப்படத்தில் சரத்குமார், ஆதி, முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். நாயகியாக தீபிகா படுகோனே நடிக்கிறார். ஆதி நடித்த காட்சிகள் சமீபத்தில் படமாக்கப்பட்டது.

... இப்படத்தில் நடிப்பது குறித்து ஆதி கூறியதாவது: ரஜினியின் கோச்சடையான் படத்தில் நடிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. ரசிகர்களுக்கு இதன் மூலம் புதிய அனுபவத்தை ஏற்படுத்தி கொடுத்துள்ள சவுந்தர்யாவுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
 

எனது கதாபாத்திரத்தில் ஒன்றி நடித்தேன். அதே நேரம் சவாலாகவும் இருந்தது. ரஜினியை சந்தித்தது உற்சாகமூட்டுவதாக அமைந்தது.

நான் நடித்து முடித்த கடைசி நாளில் ரஜினியுடன் சிறிது நேரம் பேச சந்தர்ப்பம் கிடைத்தது. அப்போது அவருடன் புகைப்படம் எடுத்துக் கொள்ள ஆசைப்பட்டேன்.

அதை அவரிடத்தில் சொல்ல தயங்கினேன். ஆனால் ரஜினி திடீரென என்னை பக்கத்தில் அழைத்து புகைப்படம் எடுத்துக் கொள்ளலாம் என்றார். என் தோளில் கைபோட்டு படம் எடுத்தார். அது மறக்க முடியாத தருணங்களாக அமைந்தது என்று தெரிவித்துள்ளார்.

வசூலில் சாதனை படைத்துள்ள டைட்டானிக்


ஹாலிவுட் இயக்குனர் ஜேம்ஸ் கமரூனின் 3 டி தொழில்நுட்பத்தில் உருவான டைட்டானிக் திரைப்படம் இந்தியாவில் வசூலில் சாதனை படைத்துள்ளது.
டைட்டானிக் கப்பல் மூழ்கிய 100வது தினத்தை கொண்டாடும் வகையில் டைட்டானிக் 3டி படம் திரைக்கு வந்தது.

... இப்படத்தில் லியோனர்டா டி காப்ரியோ, கேத் வின்ஸ்லெட் ஆகியோர் நடித்துள்ளனர்.

டைட்டானிக் படத்தின் பதிப்பை இந்தியன் பாக்ஸ் ஓபிஸ் நிறுவனம் வெளியிட்டது.


இந்நிறுவனத்தின் இந்திய கிளைக்கு மட்டும் லாபமாக ரூ.18 கோடி கிடைத்துள்ளது. உலகம் முழுவதும் டைட்டானிக் படத்தின் மூலமாக 2.1 பில்லியன் லாபமாக கிடைத்துள்ளது.

இதற்கு முன்பு டைட்டானிக் திரைப்படம் 1997ம் ஆண்டு திரைக்கு வந்தபோது ரூ.55 கோடி லாபம் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

இதன் மூலம் உலக அளவில் வசூல் சாதனையில் டைட்டானிக் இரண்டாம் இடத்தை தக்க வைத்துள்ளது.

ஜேம்ஸ் கமரூனின் இயக்கத்தில் வெளியான அவதார், 2.8 பில்லியன் டொலர்கள் சம்பாதித்து முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.



மிருகமாகிபோனான்............


மிருகமாக இருந்தவன் மனதில் அன்பு,காதல் உருவாகி மனிதனாகினான் இன்று மனிதத்தை தொலைத்துவிட்டு அந்த வேஷத்தை மட்டும் கலைக்காமல் மனிதன் என்கிறான்......... எங்கும் வன்முறை ஒருவனை ஒருவன் அழிக்கவே அவனது ஆக்கங்கள் இருகின்றன..... எங்களை நாங்களே அழிபதுக்கு போட்டிபோட்டுக்கொண்டு புது புது கண்டுபிடிப்புகள் ........... மதம், நாடு, மொழி, இனம், சாதி, என பிரிந்து நீ பெரிதா நான் பெரிதா என்ற போட்டியில் மீண்டும் மிருகமாகிபோனான்............

Friday, March 16, 2012

உங்களை நேசிக்கிற பெண் .....

 
உங்களை நேசிக்கிற பெண் நேருக்கு நேர் பார்க்க மாட்டாள். கடைக் கண்ணால் நோ க்குவாள். நீங்கள் பாராத சமயமாய்ப் பார் த்து மகிழ்வாள். உங்கள் மீது அக்கறையற் றவள்போல் பாசாங்கு செய்வாள். அவசி யமில்லாத நிலையிலும் அளவுக்கு மீறி இழுத்து போர்த்திக் கொள்வாள்.

நீங்கள் ஏதாவது கேட்டு வைத்தால் புன் முறுவலுடன் தலை குனிவாள். பொருள ற்ற வார்த்தைகளை உதிர்ப்பாள். ஆனால். உங்கள் அருகாமையை விரும்புவாள் மணிக்கணக்கில் மௌனமாய் ...அமந்திருப் பாள்.

அவள் தொலைவில் உங்களை கண்டதும் தனது தோழிகளிடம் அவர் என் னைப்பார்தர்னா சொல்றீங்.. என்று கே ட்டு உங்கள் கவனத்தை ஈர்ப்பாள். உங்க ளை போகவிட்டு சிரிப்பாள். உங்கள் முன்னிலையில் யாருடைய குழந்தை யையும் எடுத்துக் கொஞ்சுவாள் முத்த மிடுவாள்.

அவளுடைய உடம்பினை ஒவ்வோர் அங்கமும் உங்கள் மீது அவள் கொண்டி ருக்கும் காதலை வெளிப்படுத்தும்.
 
ஏதாவது ஒரு சாக்கு வைத்துக்கொண்டு உங்கள் வீட்டுக்கு வருவாள். தன்னை விசேசமாய் அலங்கரித்துக் கொண்டிருப்பாள். அவளுடைய கை க்குட்டை சூடிய மலர். மோதிரம் போன்ற சின்னச் சின்னப் பொருள் களில் ஒன்றை உங்களுக்கு தரும்படி விரும்பிக் கேளுங் கள். முதலில் சற்று தயங்கினாலும் பிறகு மறுக்க மாட்டாள்.

அவளுக்கு நீங்கள் வாங்கித் தந்த ஆடை. அணிகளை எப்போதும் பிரியமாய் அணி ந்து கொள்வாள். ஒரு பெண்ணின் காதலை உறுதி செய்து கொள்ள இப்படி அநேக வழி கள்.

எப்படி வெல்கிறது…?

உங்களிடம் மிகுந்த நேசம் கொண்ட பெண் எதற்க்கும் தயராகிவீடுவாள். உங்களுடன் துயிலவும். உங்களை இரகசியமாய் மணந்து கொள்ளவும்.அவளுடன் நீங்கள் சதுரங்கம் ஆடும் போது தவறுதலாய் ஒரு காயை அவள் நகர்த்திவிட்டால் இது தப்பு என்று அவ ள் கையை பற்றுங்கள். பார்ப்பதற்க்க தவறை தடுக்கின்ற மாதிரி தெரிய வே ண்டும்.

அதையே சாக்காய் வைத்து நெடுநேரம் அவள் கையை விட மாட்டீர்கள். அவளு ம் அதை விடுவித்து கொள்ளவதற்க்கு முயல மாட்டாள். உங்களு க்குள் ஒரு புதிய நெருக்கம் ஏற்ப்பட்டிருப்பதை இருவருமே அப்போது உணர்வீர்கள்.

Wednesday, March 7, 2012

ஆழ்மனதைப் பற்றி சிறிது தெரிந்து கொள்ளலாம் வாருங்கள் நண்பர்களே ...!!!!

நமது ஆழ்மனம் நாம் விரும்பும் எதையும் நமக்கு கொடுக்கவல்லது! மனத்தில் இரண்டு நிலைகள் உண்டு.

1.மேல் மனம் (conscious Mind) அல்லது வெளிமனம்
...
2. ஆழ்மனம் ( Sub Conscious Mind)

.மேல்மனத்தை விடப் பல மடங்கு பெரியதும், ஆற்றல் மிக்கதும் ஆழ்மனம் ஆகும்.

மேல்மனம் என்பது விழிப்பு, உணர்வு நிலை எனப்படும். நினைவு நிலைக்கு இதுவே காரணமாகிறது. ஆனால் ஆழ்மனம் துயில் நிலைக்கும், துயிலுக்கும் விழிப்புக்கும் இடைப்பட்ட மெய்மறதி நிலைக்கும் காரணமானது ! அந்த காரணத்தை பற்றி காண்போம் .
 

நாம் படிப்பதும், பேசுதலும், செயல்படுவதும் மேல் மனத்தின் மூலமாகத்தான், ஆனால் என்ன படிக்கிறோம், ஏன் , எதற்கு ,எப்படிச் செயல்படுகிறோம் என்பதற்கெல்லாம், ஏன் , எதற்கு ,எப்படிச் செயல்படுகிறோம் என்பதற்கெல்லாம் காரணம் அடிமனம் தான் (ஆழ்மனம்)

எனவே நமது குறிக்கோள்களை நமது அடிமனம் ஏற்றுக்கொள்ளுமாறு எண்ணங்களைச் செலுத்த வேண்டும். நாம் செய்ய வேண்டியது இதுதான்.

நமது ஆழ்மனத்தோடு தொடர்பு கொள்ள வேண்டும்.

உங்கள் வாழ்க்கையின் குறிக்கோள்கள் என்ன என்பதை ஆழ்மனதிற்கு தெரிவிக்க வேண்டும்.

உங்கள் குறிக்கோள்களைத் தெளிவாகத் தெரிந்து கொண்ட ஆழ்மனம், அந்த குறிக்கோள்களை விரைவில் அடைய வழிமுறைகளைக் கண்டுபிடித்து, உடனே உங்களைச் செயல்படுத்த தூண்டும்.

நமது குறிக்கோள்களை ஆழ்மனத்திற்கு எப்படி கொண்டு செல்வது..
 

நமது எண்ணங்கள் எல்லாம் நமது குறிக்கோள்களைப் பற்றியதாகவே இருக்க வேண்டும்.

ஒரு நாளைக்கு ஒரு குறிப்பிட்ட வேளையில் (காலையில் 15 நிமிடங்கள்) குறிக்கோளை அடைவதற்கான மனப்பயிற்சியை செய்துவர வேண்டும். இந்த மனோபயிர்ச்சி செய்யும் போது மனதில் மற்ற நினைவுகளுக்குபங்கு அழிக்க கூடாது .

நமக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம், கண்ட குப்பை எண்ணங்களை எண்ணாமல், நமது குறிக்கோளைப் பற்றிய எண்ணங்களாகவே நினைக்க வேண்டும்

உதாரணமாக வீடு வேண்டும் என்றால் அந்த வீட்டில் (கற்பனை வீட்டில்) எத்தனை அறைகள் இருக்க வேண்டும். அதனுடைய அளவுகள் எப்படி இருக்க வேண்டும், எந்த அளவில் கதவுகள், வர்ணங்கள் என்ன என்பதை பற்றிய கற்பனைகளையே உங்களது எண்ணம் முழுவதும் நிரம்பியிருக்க வேண்டும். இப்படி காணும் ஒவ்வொரு கற்பனைகளும் உங்கள் மனதில் பதிந்து விடுகிறது அதை அப்படியே செயல் படுத்தமனம் தூண்டுகிறது .

உங்கள் மனதில் குறிக்கோள் விதையை வலுவாக ஊன்றுங்கள்... அதை உங்களது தீவிர எண்ணங்களால் உரமேற்றுங்கள்.. நிச்சயம் உங்களது குறிக்கோளை அடைந்துவிடுவீர்கள். விதைத்ததையே அறுவடை செய்து விடுவீர்கள் என்பது நிச்சயம்.
 


உங்களது கற்பனையில் உங்களது குறிக்கோளை ஒரு படமாக மாற்றி அதை உங்கள் மனத்திரையில் ஓட்டிப் பார்க்க வேண்டும். என்ன நினைக்கிறீர்களோ அதை அப்படியே செய்து முடிப்பதாக நினக்க வேண்டும். உதாரணத்திற்கு ஒரு புதிய வீடு கட்ட வேண்டும் எனில், கற்பனையில் வீடுகட்டி அதற்கு கிரகப்பிரவேசமும் செய்து முடித்ததாக எண்ண வேண்டும்.. உங்கள் கற்பனை எண்ணங்கள் மேலோங்கி , எண்ணங்கள் வலுப்பெற்று அது உண்மையாகவே நடக்க ஆரம்பித்துவிடும்.

குறிக்கோள்களை அடைவதற்கு, தற்காலத்தில் அனுபவிக்கக் கூடிய சிறுசிறு சுகங்களை தியாகம் செய்யவும் தயங்கக் கூடாது.

உங்கள் ஆழ்மனத்தை, பிடிவாதத்துடன் நம்ப வைத்துவிடுங்கள். ஆழ்மனம் வெகு சீக்கிரம் உங்கள் குறிக்கோளில் கொண்டு சேர்த்துவிடும்...
 

உங்களது குறிக்கோளை தெளிவாக ஒரு அட்டையில் எழுதி அதை நாம் அதிகம் பார்க்கும் இட்டங்களில் பதித்து விட வேண்டும் உங்கள் கண்களில் அடிக்கடி படும்படியாக வைத்துக் கொள்ள வேண்டும். அதைப் பார்க்கும் போதெல்லாம், எண்ணங்கள் உங்கள் குறிக்கோளின் மீது குவியட்டும். அப்படி நாம் குவிக்கும் மனம் நம்மை அந்த நன் செயலுக்கு காரணமாக மாற்றி அந்த செயலை நமக்கு பரிசு அளிக்கிறது .

எனவே நாம் நமது குறிக்கோளைத் தெளிவாக ஒரு காலவரையில் முடித்தே தீருவேன் என்று முதலில் தீர்மானித்துக் கொள்ளுங்கள். பின்பு ஆழ்மனத்துடன் தொடர்பு கொள்ளுங்கள். வெற்றி நிச்சயம் !

மேலும் தன்னம்பிக்கையே ஒருமனிதனை வெற்றிக்கு அழைத்து செல்லும் தாரக மந்திரம் அல்லவா ....?. அந்த தன்னம்பிக்கையின் எதிரி யார்,,,,,? என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்துகொள்ளுங்கள்.

மூக்குத்தி அணிவது ஏன்?

மூக்கு குத்துவது, காது குத்துவது துளையிடுவது உடலில் உள்ள வாயுவை ,காற்றை வெளியேற்றுவதற்கு. கைரேகை, ஜோசியம் பார்ப்பவர்கள் ஆண்களுக்கு வலது கையும் பெண்களுக்கு இடதுகையும் பார்த்து பலன் கூறுவது வழக்கம். ஆண்களுக்கு வலப் புறமும் பெண்களுக்கு இடப் புறமும் பலமான, வலுவான பகுதிகளாகும்.

ஞானிகளும் ரிஷிகளும் தியானம் செய்துபோது வலது காலை மடக்கி இடது தொடை மீது போட்டு தியானம் செய்வார்கள். இத...ற்கு காரணம் இடது காலை மடக்கி தியானம் செய்யும் போது வலது பக்கமாக சுவாசம் போகும். வலது என்றால் தமிழில் வெற்றி என்று பொருள். வலது பக்கமாக சுவாசம் செல்லும்போது தியானம், பிராத்தனை எல்லாம் கண்டிப்பாக பலன் தரும். அதனால் இந்த நாடியை அடக்குவதாக இருந்தால் வலது பக்க சுவாசத்திற்கு மாற்றவேண்டும். அதே மாதிரி ஒரு அமைப்புத்தான் மூக்குத்தி.
 நமது மூளைப் பக்கத்தில் ஹிப்போதலாமஸ் என்ற பகுதி இருக்கிறது. நரம்பு மண்டலங்களை கட்டுப்படுத்தக் கூடிய, செயல்படக் கூடிய அளவு சில பகுதிகள் உள்ளன. அந்தப் பகுதியில் சில உணர்ச்சி பிரவாகங்கள் உள்ளன. இதனைச் செயல்படுத்துவதற்கு அந்தப் பகுதி துணையாக இருக்கிறது. இப்படி இந்தப் பகுதியை அதிகமாக செயல் படுத்துவதற்கும் பெண்ணின் மூக்கில் இடது பக்கத்தில் குத்தக்கூடிய முக்குத்தி வலது பக்க மூளையை நன்றாக செயல் படவைக்கும். இடது பக்கத்தில் முளை அடைப்பு என்றால் வலது பக்கத்தில் நன்கு வேலை செய்யும். வலது பக்கம் அடைத்தால் இடது பக்கம் உள்ள மூளை அதிகமாக இயங்கும்.
 

இன்றைய நம்முடைய மனித வாழ்க்கைக்கு அதிகமாக இந்த இடது பக்க மூளையை அடைத்துவலது பக்கமாக வேலை செய்ய வைக்கிறோம். அதனால் வலது கை, வலது கால் எல்லாமே பலமாக உள்ளது. பெண்கள் முக்குத்தி அணியும்போது, முன் நெற்றிப் பகுதியில் இருந்து ஆலம் விழுதுகள் போல்சில நரம்புகள் நாசி துவாரத்தில் இறங்கி கீழே வரும். இப்படி விழுதுகள் மூக்குப் பகுதியிலும், ஜவ்வு போல மெல்லிய துவாரங்களாக இருக்கும். ஆலம் விழுதுகள் போல உள்ள மூக்குப் பகுதியில் ஒரு துவாரத்தை ஏற்படுத்தி அந்த துவாரத்தில் தங்க முக்குத்தி அணிந்தால், அந்த தங்கம் உடலில் உள்ள வெட்பத்தை கிரகித்து தன்னுள்ளே ஈர்த்து வைத்துக் கொள்ளும் சக்தியைப் பெறும். அதுமட்டுமல்ல, மூக்கின் மடல் பகுதியில் ஒரு துவாரம் ஏற்பட்டால் அதன் மூலம் நரம்பு மண்டலத்தில் உள்ள கெட்ட வாயு அகலும்.

சிறுமிகளுக்கு மூக்குத்தி அணிவிப்பது கிடையாது. பருவப் பெண்களுகே முக்குத்தி அணிவிக்கப்ப்டுகிறது. பருவ வயதை அடைந்த பெண்களுக்கு கபாலப் பகுதியில் அதாவது, தலைப்பகுதியில் சிலவிதமான வாயுக்கள் இருக்கும்.இந்த வாயுக்களை வெளிக்கொண்ருவதற்கு ஏற்படுத்தட்டதுதான் இந்த மூக்கு குத்துவது. மூக்கு குத்துவதால் பெண்களுக்கு ஏற்படக்கூடிய சளி, ஒற்றைத் தலைவலி, மூக்கு சம்பந்தமான தொந்தரவுகள், பார்வைக் கோளாறு சரி செய்யப்படுகின்றன்.
 

இன்றைக்கு நாகரிகம் வளர்ந்து விட்டதால் சில பெண்கள் வலதுப் பக்கம் மூக்குத்தி அணிகிறார்கள். ஆனால், சாஸ்திர ரீதியாக இடப்பக்கம்தான் பெண்கள் மூக்குத்தி அணியவேண்டும். இடது பக்கம் குத்துவதால் சில மாற்றங்கள் ஏற்படும். சிந்தனா சக்தியை ஒரு நிலைப்படுத்துகிறது. மனதை அமைதிப்படுத்துகிறது. தியானம், பிராத்தனையில் ஈடுபட உதவுகிறது. ஒற்றைத்தலைவலி, நரம்பு சம்பந்தமான நோய்கள், மனத்தடுமாற்றம் ஏற்படாமல் இருக்க முக்குத்தி உதவுகிறது என்று ஞானிகளும் ரிஷிகளும் கூறியிருக்கின்றனர்.

உடலிலுள்ள வெப்பத்தைக் கிரகித்து நீண்ட நேரம் தன்னுள்ளே வைத்திருக்கூடிய ஆற்றல் தங்கத்துக்கு இருக்கிறது. தங்க நகைகளைப் பெண்கள் அணிவதன் மூலம் உடலில் ஏற்படும் அதிக வெப்பம் உணர்ச்சியாக மாறுவதிலிருந்து தடைப்பட்டுபோகும். அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு, ஆகிய நால்வகைப் பண்புகள் உடையவர்களாகத் திகழ முடியும். தங்க நகைகள் அணிவதால் உணர்ச்சிப் பிரவாகம் தடைப்பட்டு பெண்களின் உடல் வெப்பம் சம நிலையடைகிறது. இதனால் அவர்களது வாழ்க்கை தர்ம நெறிகளுக்கு உட்பட்டு

திரு நங்கைகள்

 
திரு நங்கைகள்- ஒரு சமூகத்தின் அவலமா ? தயவு செய்து நண்பர்கள் இதை பொறுமையாக படித்து விட்டு செல்லுங்கள். தகப்பனுக்கோஅவமான சின்னமாய் உடன்பிறப்புகளுக்கோ கேலியாய் உறவினர்களுக்கோ வேடிக்கையாய் சமுதாயத்திற்கோ கேள்வி குறியாய் எங்களுக்கோ வாழ்க்கை தவிப்பாய் நாங்களும் மனிதர்கள் தானே , எல்லோரும் இந்நாட்டு மன்னர்கள் என்பர் எங்களை ...மன்னராய் மனிதராய் வேண்டாம் மனிதராய் மதியுங்கள் மனமில்லா எங்களிடம் தாயே அணைக்க மறுத்த சேய்கள் நாங்கள் வேறு யார் வந்துதான் எங்களை ஆதரிப்பார்கள் கிராமப்புரங்கள் முதல் நகரங்கள் வரை ஒருவரை சிறுமைபடுத்தவோ கேவலப்படுத்தவோ பயன் படுத்ப்படும் சொல் “ பொட்டை, அலி , ஒம்போது ” பலருக்கு இந்த கருத்து உண்டு. இவங்க எல்லாம் எதுக்கு உயிர் வாழராங்க ஒம்போதாயிட்டோம்னு தெரிஞ்சஉடனே நாண்டுக்கிட்டு சாக வேண்டியது தான.
 
ஒருவருக்கு குழந்தை இல்லை என்றால் கூட அலி என அழைப்பது வழக்கமாகிவிட்டது. ஒரு சமுகத்தில் பெண்ணின் வயிற்றை கிழித்து சிசுவை கொன்றவனைப்பற்றியோ தின்ணியத்தில் மனிதன் வாயில் மலத்தை திணித்த்தவனை பற்றியோ வாய் திறவாத இச்சமூகம் பாலின வேறு பாடுள்ள ஒரு சமூகத்தையே சாகச்சொல்கின்றது. மானம் ( மனம் ) கெட்ட மனிதன் . ஆண் பெண் என்பதனை உறுப்பின் மூலமாக அறிகின்றோம்.அதனால் திரு நங்கைகள் சுமார் 13 வயது வாக்கில் தான் கண்டறியப்படுகிறனர் அந்த வயதில்தான் ஆணும் பெண்ணும் பருவ மாற்றம் அடைகின்றனர். மேலை நாடுகளில் திரு நங்கை சமமாக நடத்தப்படுவதாக கூறப்படுகிறது. இந்தியாவில் குறிப்பாக சில மாநிலங்களில் திருநங்கைகள் நிலை மிகவும் அவமானகரமானதாக உள்ளது. இந்து மத வழக்கப்படி அரவணி என அழைக்கப்படுகிறனர். ஆனா என்னை பொறுத்தவரை திருநங்கை எனவும் திருமங்கை என்று அழைக்கலாம், சமுகத்தில் வெறி பிடித்த மனிதர்கள் சிலர் பெண்னை அடிமையாய் வைத்திருப்பது போல திரு நங்கை பாலியல் ரீதியிலான அடிமையாக வைக்கப்பட்டிருக்கின்றனர். இந்த சமுதாயத்தில் ஆண், பெண், விலங்குகள் வாழலாம் ஆனால் திரு நங்கை வாழக்கூடாது. பண்டைய கால இலக்கியங்கள் முதல் தற்கால ஊடகங்கள் வரை திரு நங்கைகளை கேலிப்பொருளாகவே பயன் படுத்துகிறனர்.
 
மனித இனத்தாலேயே ஒரு பாலினம் கேவலப்படுத்தப்பட்டு புறக்கணிக்கப்பட்டு வருவது கொடுமையிலும் கொடுமை.. அதாவது உன்னை மனிதனாக ஏற்க முடியாது என்று கூறுகின்றனர் கழிவறை முதல் பேருந்து வரை எல்லா இடத்திலும் உரிமைகள் மறுக்கப்பட்டு வருகிறது. நீ செய்ய வேண்டிய ஒரே தொழில் பாலிய்ல் தொழில் என பல்லை காட்டுகிறது சமூகம். அதற்காகவ படைக்க பட்டர்கள் அவர்கள் யோசியுங்கள் . இரு திரு நங்கைகள் ரோட்டில் நடந்து சென்றால் ஆண்கள், பெண்களின் கேலிக்கும், நமட்டு சிரிப்புக்கும் ஆளாகாமல் இருக்க முடிகிறதா ? இப்படி செல்லும் இடங்களிலெல்லாம் உளவியல் மனோரீதியிலான கடும் நெருக்கடிக்கு ஆளாக்கப்பட்டு பெரும்பாலான் திரு நங்கைகள் வயிற்று பிழைப்புக்காக பாலியல் தொழிலையும் பிச்சையெடுத்தலையும் செய்கின்றனர். திரு நங்கைகளில் சிலர் செய்யும் தவருதளுக்காக ஓட்டு மொத்த திரு நங்கைகளில் குறை கூறுவது தவறு. தப்பு பண்ணுகிற நிறையபேர் ராஜவாழ்க்கை வாழும் போது இவங்க என்ன தப்பு செஞ்சாங்க..? எதுக்கு இந்த சமுகம் இவர்களுக்கு இவ்ளோ பெரிய இழிவை தந்திருக்கிறது ? இப்படி பிறந்தது இவங்க தப்பா ? இவங்களுக்கு மரியாதையும் அங்கீகாரமும், தராம அவங்களை இந்த நிலைக்கு கொண்டுவந்தது நம் சமுகம்தானே சமுகத்தில் நாமும்தான் இருக்கிறோம் என்பதை மரவாதிர்கள். 
 
நானும் சிறு வயதில் இவர்ககளை கண்டு ஒதுங்கி இருக்கிறேன் இல்லையென்று சொல்லவில்ல, இதற்க்கு காரணம் எனது பெற்றோர்கள். அவர்களுக்கு போதுமான அளவு விழிப்புணர்வு இல்லை அப்போது ஆனா இப்போது அவர்களுக்கு நான் எடுத்துரைகின்றேன். மேலும் நமது குழந்தைகளுக்கு இவர்களைப்பற்றி தெளிவாக நாம் சொல்லி கொடுத்து இருக்கிறோமா ? இல்லை இனியாவது நாமும் நமது குழந்தைகளுக்கும் இவர்களை பற்றி புரியாத நபர்களுக்கும் எடுத்துரைப்போம். திருமங்கைகள் பற்றிய விழிப்புணர்வு அனைவரிடமும் வரவேண்டும். அவர்களுக்கு சமூகத்தில் ஒரு நல்ல இடம் அளிக்க வேண்டும். எல்லா உயிரும் ஒன்றே இவர்களை ஒதுக்காமல் ஆதரவு கொடுப்போம்......பொறுமையாய் படித்த நண்பர்கள் அணைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

மனிதன் ஒருநாளும் தெய்வமாக முடியாது


மனிதன் ஒருநாளும் தெய்வமாக முடியாது.
இதை நிரூபிப்பதற்கு இந்த புகைப்படமும் ஒரு சாட்சி.
இங்கே நாம் படத்தில் பார்ப்பது, திரைப்பட பின்னணி பாடகி சித்ரா அவர்களும்,அவரது 8 வயது மகளும், திரு மறைந்த சாயிபாபா அவர்களிடம் ஆசீர்வாதம் பெற வந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படம்.
 இன்றைய தேதியில் ஆசீர்வாதாம் வாங்கிய அந்த 8 வயது குழந்தையும் இந்த உலகில் இல்லை.
          அந்த குழந்தையின் சிறப்பிற்காக ஆசீர்வாதம் வழங்கிய சாயிபாபா அவர்களும் இந்த உலகில் இல்லை.
எதிலுமே எல்லாவற்றையும் மிஞ்சியதை தனது சொந்தமாக பாவிக்க விரும்பும் மனிதன், மரணிக்கக்கூடிய மனிதர்களையும், அழியக்கூடிய விசயங்களையும் வணகுவது ஆச்சர்யமாகவே உள்ளது...!!!

Tuesday, February 28, 2012

நினைவஞ்சலி விளம்பரம் ஒரு மோசடி - அதிர்ச்சி ரிப்போர்ட்

அக்காதான் குடுத்து வைக்கவில்லை நான் உங்களோடு கதைக்க ஆசைப்படுகிறேன் என்று, இறந்த காதலியின் தங்கை தற்போது இந்த இளைஞனோடு தொடர்பை ஏற்படுத்தியிருக்கிறாராம். சுருக்கமாகச் சொல்லப்போன...ால், இறந்த காதலியின் தங்கை இப்போது இந்த இளைஞனை காதலிக்கிறாராம். இனி இவர் படிப்புக்கு, குடும்பச் செலவுக்கு என்று எல்லாம் காசு கறக்கும் நாடகம் ஆரம்பமாகும். இப்படியே ஒரு வட்டம் செயல்பட்டு வருகிறது. பேஸ்புக் ஊடாக இளைஞர்களை வளைத்துப் பிடிப்பது, அதுவும் விசா இல்லாவிட்டால் அவர் கொழும்புக்கு வரமாட்டார். பின்னர் பழகி காதலிப்பது போல் நடிப்பது, இந்தியாவில் ஏதாவது ஒரு மாநிலத்தில் உள்ள பெண் ஒருவரின் படத்தை எடுத்து அது தான் நான் என்று அனுப்புவது.

பின்னர் காசைக் கேட்பது. ஏதாவது ஏடாகூடம் ஆனால், அவள் செத்துவிடுவாள். இல்லையேல் கான்சர் வரும், இல்லையேல் இப்போது எனக்கு எயிட்ஸ் வந்துவிட்டது என்று சொல்லி நழுவிவிடுவார்கள் குளிரிலும் மழையிலும் கஷ்டப்பட்டு உழைக்கும் காசு காத்தோடு போய்விடும். குறிப்பிட்ட இளைஞர் ஒரு வருடத்தில் 10,000 பவுன்ஸுகளுக்கு மேல் அனுப்பியுள்ளாராம்.

குறிப்பாக சொல்லப்போனால் வெளி மாவட்டங்களிலிருந்து கல்வி கற்பதற்காகவும், தொழில்புரிவதற்காகவும் கொழும்புக்கு வந்து 5 அல்லது 5 பேராக ரூம் எடுத்துத் தங்கியிருக்கும் பெண்களே இவ்வாறான வேலைகளைச் செய்து வருவதாக ஆதாரமான தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர்களில் ஒரு சிலர் இலங்கையிலுள்ள ஊடகத்துறைகளில் பணிபுரிபவர்களாக தம்மைக் காட்டிக் கொள்வதுதான் வேதனையான விடயமாக இருக்கிறது.

பேஸ்புக் மூலம் வெளிநாட்டில் வசிக்கும் இளைஞர்களை நண்பர்களாக்கி அவர்களின் பலம், பலவீனம், வங்கி இருப்பு, எல்லாவற்றையும் அறிந்துகொண்டு கொஞ்சம் கொஞ்சமாக ஆசை வார்த்தைகளைக் காட்டி பணத்தைக் கறக்க ஆரம்பித்து விடுகின்றனர். பணம் இங்கு வந்ததும் பிறகென்ன உல்லாச வாழ்க்கைதான். MC, பிட்சா சென்ரர், KFC, பியூட்டி பார்லர் என தமது நண்பிகளுடன் அல்லது ஆண் நண்பர்களுடன் பணத்தை செலவழித்து முடிக்கின்றனர். கொழும்பில் இவர்கள் அடிக்கும் லூட்டிக்கு, வெளிநாட்டில் உள்ள தமிழ் இளைஞர்கள் தான் பலிகடாவாகின்றனர். வெளிநாடுகளில் உழைக்கும் இளைஞர்களே மிகவும் அவதானமாக இருங்கள். இச்சம்பவம் உங்களுக்கும் ஒரு பாடமாக இருக்கட்டும்.

நாய்கள் சத்தமிட்டதால் அயல் வீட்டாருக்கு தொந்தரவு; உரிமையாளருக்கு அபராதம்!!

வீட்டுக்கு வெளியில் நாய்களை கூட்டில் அடைத்து அந்த நாய்கள் போடும் சத்தத்தினால் அயல் வீட்டாரின் நிம்மதியைக் கெடுத்தார் என்ற குற்றச்சாட்டில் யாழ். நாவலர் பிரதேசத்தைச்... சேர்ந்த ஒருவருக்கு யாழ்.நீதிவான் நீதிமன்றம் 1000 ரூபா அபராதம் விதித்துள்ளது.

யாழ். நாவலர் பகுதியில் வீட்டுக்கு வெளியில் நாய்க்கூடு அமைத்து நாய்களை அடைத்து வைத்து அது பொதுமக்களின் போக்குவரத்திற்கு மற்றும் அயல் வீட்டாரின் நிம்பதியைக் கெடுத்ததன் காரணமாக கோப்பாய் பொலிஸார் நாய்களின் உரிமையாளருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கு இன்று வெள்ளிக்கிழமை யாழ்.நீதிவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, குற்றத்தை ஒப்புக்கொண்ட நாய்களின் உரிமையாளருக்கு 1000 ரூபா அபராதம் விதித்து யாழ்.நீதிமன்ற நீதிவான் மா.கணேசராசா தீர்ப்பு வழங்கினார்.

50 ஆண்டுக்குப் பின் பௌத்த பிக்கு ஒருவருக்கு மரண தண்டணை

விவசாயி ஒருவரைக் கத்தியால் குத்திக் கொலை செய்தமைக்காக பௌத்த பிக்கு ஒருவருக்கும் அவரது மாமனாருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
தென்மாகாணம் தங்காலை, கட்டுவான அம்பகஸ்ரா விஹாரையின் கோமடியே சரண என்ற பௌத்த பிக்குவிற்கே மரண தண்டனை விதிக்கப்பட்டது.

யாழில் மனைவியை தீயிட்டுக் கொளுத்திய கணவன் தலைமறைவு!!

யாழ்.மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சுதுமலைப் பகுதியில் கணவனினால் மண்ணெண்ணெய் ஊற்றிக் கொளுத்தப்பட்ட பெண் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக மானிப்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளன...ர்.

கணவனுக்கும் மனைவிக்கும் இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தையடுத்து கணவன் மனைவி மீது மண்ணெண்ணெய் ஊற்றிக் கொளுத்தியுள்ளதாகவும் அப்பெண் இன்று திங்கட்கிழமை மாலை எரிந்த நிலையில் சடலமாக காணப்பட்டதாகவும் மானிப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவத்தில் தொடர்புடைய நபர் தலைமறைவாகியுள்ளதாகவும் அவரைத் தேடும் பணியில் தாம் ஈடுபட்டுள்ளதாகவும் மானிப்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Monday, February 20, 2012

நடிகை எஸ்.என். லட்சுமி மரணமடைந் தார்.



               பழம்பெரும் நடிகை எஸ்.என். லட்சுமி மரணமடைந் தார். அவருக்கு வயது 85. எம்.ஜி.ஆர், சிவாஜி உட்பட இன்றைய ஹீரோக்களுக்கும் அம்மாவாக நடித்து புகழ்பெற்றவர் நடிகை எஸ்.என்.லட்சுமி. சுமார் ஆயிரம் படங்களுக்கு மேல் நடித்துள்ள இவர், சமீபகாலமாக டி.வி சீரியல்களில் நடித்து வந்தார். ஒரு படப்பிடிப்பின்போது கீழே விழுந்ததில் அவரது முதுகு தண்டுவடத்தில் காயம் ஏற்பட்டது.

அவரது உடல் நேற்று மாலை சொந்த ஊரான விருதுநகர் மாவட்டம் சென்னல் குடிக்கு கொண்டு செல்லப்பட்டது.
சிறு வயதிலிருந்தே மேடை நாடகங்களில் நடித்து வந்த அவர், நடிப் பின் மீது மிகுந்த ஆர்வமும், ஈடுபாடும் கொண்டவர். தமிழ்நாடு அரசின் ‘கலைமாமணி'', ‘கலைச்செல்வம்'' உட்பட பல்வேறு விருது களை பெற்றவர்.’’




 

Friday, February 17, 2012

நிர்வாணக்கோலத்துடன் திருமணம்



ஒன்பது ஜோடி காதலர்கள் நிர்வாணக்கோலத்துடன் ஒரே வைபவத்தில் திருமணம் செய்துகொண்ட சம்பவம் ஜமைக்காவில் இடம்பெற்றுள்ளது.
ஜமைக்காவின் நீக்ரில் கடற்கரையில் இந்த திருமண நிகழ்வு இடம்பெற்றுள்ளது. இதில் கலந்துகொண்ட மணமகள்கள் முகத்திரைகளை மாத்திரம் அணிந்திருந்தனர். ஆனால் இவர்களின் உடலில் பெயின்றுகள் பூசப்பட்டிருந்தன.



... உல்லாச ஹோட்டலொன்று அனைத்து திருமணம செலவுகளையும் தானே ஏற்றுக்கொண்டு குழுவாக நிர்வாண திருமணம் செய்துகொள்ள 10 காதல் ஜோடிகளை அழைத்திருந்தது. ஆனால் ஒரு காதல் ஜோடியானது இந்நிகழ்வு இடம்பெறுவதற்கு முதல் நாள் இத்திட்டத்திலிருந்து வாபஸ் பெற்றது.
இந்த திருமண ஜோடிகள் கேள்விக்கொத்தொன்றின் மூலம் இத்திருமணம் வைபவத்திற்கு தெரிவுசெய்யப்பட்டனர். ஏன் இவர்கள் நிர்வாணக்கோலத்துடன் திருமண வாழ்க்கையை ஆரம்பிக்க விரும்புகிறீர்கள்? என்பதும் ஒரு கேள்வியாகும். சுமார் 100 ஜோடிகள் இதற்கு விண்ணப்பித்திருந்தன. அவற்றிலிருந்து 10 ஜோடிகள் தெரிவுசெய்யப்பட்டன.

Thursday, February 16, 2012

பெற்ற குழந்தையை தீ இட்ட பெற்றோர் !!

பிறந்து ஒரு நாளேயான , ஆண் குழந்தை ஒன்றை பெற்றோர் தீயிலிட்டு எடித்துள்ளனால்.   இந்த சம்பவம் திருப்போஊரில் இடம்பெற்றுள்ளது.
     விபரம் அறிந்து  விரைந்த பொலிசார். ,  விசாரிக்கும்போது பெற்றார்   மேலும் தெரிவித்தாவது ,   தமக்கு திருமண வயதில் இரு பெண்பிள்ளைகள் உள்ளதாகவும்,   அப்படி இருக்கும் போது இப்போது இந்தக் குழந்தை பிறந்தது தமக்கு ஆவமானம் என்றும் தெரிவித்துள்ளனர்.

          பின்பு போலீசார் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tuesday, February 14, 2012

எழுமிச்சையிலிருந்து மின்சாரம்

குற்றாலம் ஹில்டன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வருபவர் மாணவன் முஹம்மது ஹம்தான், இவர் எலுமிச்சம் பழத்திலிருந்து மின்சாரம் தயாரித்து சாதனை படைத்துள்ளார் .

 
 

நான்கு எலுமிச்சை பழங்களை எடுத்துக் கொண்டு ஒவ்வொரு பழத்திலும் இரும்பு ஆணி மற்றும் காப்பர் கம்பியை செருகினார். இதன் பின்னர் காப்பர் கம்பியை தனி வயரிலும், இரும்பு ஆணியை தனி வயரிலும் இணைத்து சிறிய 2 வோல்ட் திறன் கொண்ட சிறிய பல்பினை எரிய வைத்து இந்த சாதனையை நிகழ்த்தி காட்டினார்.

மேலும் "எலுமிச்சை, பல்லாரி, உருளைக்கிழங்கு, தக்காளி, கத்தரிக்காய், ஆரஞ்சு, வாழைப்பழம் உள்ளிட்டவைகளில் இருந்து மின்சாரம் தயாரிக்கலாம் என எனக்கு பாடம் நடத்திய ஆசிரியை கூறினார்கள். அதனை நான் செயல்படுத்தி மின்சாரம் கிடைப்பதை உறுதிபடுத்திக் கொண்டேன்."
இவ்வாறு மாணவன் முஹம்மது ஹம்தான் கூறினார்.

 

காதலர் தினம் என்ற பெயரில் கலாச்சார சீரழிவு

காதலர் தினம் என்ற பெயரில் கலாச்சார சீரழிவை ஏற்படுத்துவதாக கூறி நூதன போராட் டம் நடத்தப் போவதாக அறிவித்திருந்தனர்.

 சென்னை மாநகர செயலாளர் மனோகரன், ஆர்கே நகர் தொகுதி தலைவர் ராஜேந்திரன் உள்பட பலர் திரண்டனர். நாய், கழுதையை கொண்டு வந்தனர்.
ரோமியோ என்று ஆண் நாய்க்கும், ஜூலியட் என்று பெண் கழுதைக்கும் பெயர் சூட்டினர். பின்னர் மாலை மாற்றி திருமணம் செய்து வைத்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்ததும் வண்ணாரப்பேட்டை போலீசார் விரைந்து வந்தனர்.

இந்து முன்னனி அமைப்பினர் 26 பேரை கைது செய்தனர். பின்னர் பயந்து போன நாயும், கழுதையும் அங்கிருந்து ஓட்டம் பிடித்தன.
போலீசார் கழுதையை மட்டும் விரட்டி பிடித்தனர். இதை வேடிக்கை பார்க்க அப்பகுதியில் மக்கள் திரண்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தாயான ஆண் !!!

பொதுவாக பெண்களே தாய்மை பேற்றை அடைவார்கள்.,   நாள் வித்தியாசமாக இந்த ஆண் தனது ''கார்மோனை ''  சுரக்க வைத்து பென்குளுக்கு உண்டான தாய்மை பேற்றை அடைந்துள்ளார்.
           இவர் லண்டனை சேர்ந்த ஒரு குடிமகனாவார்.
   இதுவரை உலகிலேயே , குழந்தை பெற்ற ஆண்களில் இத்துடன் 
05 பதிவாகியுள்ளது.
 

facebook இல் map அறிமுகம்...

எல்லோராலும் விரும்பி பார்க்கப்படும் தளங்களில் ஒன்றான, 
facebook  தற்போது புதிய வசயொன்ரை அறிமுகம் செய்துள்ளது.

  ''ஆட டு'' மப் ஆகும்.  இதன் மூலம் நாட்டிலுள்ள அனைத்து இடங்களையும் பார்வையிட முடியும் என அறிவித்துள்ளனர்.   
    அதாவது , இதன்மூலம் இடச்ன்களை பார்வையிடுவதோடு அதை நண்பர்களுக்கு பரப்பலாம் எனவும், 
facebook தெரிவித்துள்ளது.

Monday, February 13, 2012

காதலர் தினம்...


காதல் என்பது அழகான கனவு. அந்த கனவு உண்மையாவதும் இல்லை கனவாகவே போவதும் காதலர்கள் கையில் தான் உள்ளது. காதலித்த பிறகு சூழ்நிலையின் பெயரால் பிரிவதுதான் அதிகமாக நடக்கிறது . யோசியுங்கள் காதலிக்கும் முன்பு . இதை நம் யோசிக்க மறுப்பதால்தான் பல காதல்கள் தோல்வியை சந்திக்கின்றன . ஏமாற்றுவதும் ஏமாறுவதும் காதலில் இருக்கவே கூடாது .


காதலர் தினம் கொண்டாடவிட்டால் காதலர்களுக்குள் காதல் மலராது என்று அர்த்தம் இல்லை ....காதல் எப்பொழுதும் இருக்க வேண்டும் .. காதலர் தினம் கொண்டாடுங்கள் அடுத்தவர்களை முகம்சுளிக்க வைக்கும் அளவுக்கு இல்லாமல் நாகரீகமான முறையில் .. நாளை காதலர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து நிறைய அமைப்புக்கள் சுற்றி கொண்டு இருப்பார்கள் .பொது இடங்களில் அனைத்து காதலர்களும் எச்சரிக்கையாக இருங்கள்.

காதலிக்கும் போது காதலையும் நேசியுங்கள் !!!

உண்மை காதலர்கள் அனைவர்க்கும் இனிய காதலர் தின வாழ்த்துக்கள் !!!

காதலை சொல்லப்போகிறீர்கள?? சற்றுப் பொறுங்கள்;

எல்லோருடைய மனதிலும் காதல் உண்டு.
    அக்காதலை வெளிக்கொண்டு வருவதுதான் கடினம்.  அப்படியான நிலைமைகளில் நாம் கடைப்பிடிக்க வேண்டியவை கீழ்வருமாறு>>

# முதலில் உங்கள் காதலனோ, காதலியே என்ன மனநிலையில்  இருகின்றனர் என்ன்பதனை, அறிந்து கொள்ளுகின்கள்.
# அவர்களுடன் பேசும்போது அவர்களுக்கு பிடித்தவாரான விடயங்களை
மட்டும் பேசுங்கள்.
#அவளுக்கு  பிடிதவாரான , ஆடை , பழக்கவழக்கங்களை கையாளுங்கள்.
#அவளை மகிழ்விக்கும் பொருள்களையோ / வார்த்தைகளையோ பிரயோகியுங்கள்.]
# அவளுடைய பதில் எதுவானாலும்,  கோபம் கொள்ளாமல் ,   அமைதியாக பேசுங்கள்.
#அவளுடைய வார்த்தைகளுக்கு மதிபளியுங்கள்.
#உங்களுடைய உண்மை காதலை அவளிக்கு உணரவையுங்கள்.

##நிச்சயம் உங்கள் காதல் வெற்றிபெறும். ##


          உங்கள் காதல் வெற்றிபெறா வாழ்த்துக்கள். ......

Sunday, February 12, 2012

பிறந்தநாளை மறந்தார் சிறை..!!

அமெரிக்காவில் மனைவியின் பிறந்த நாளை மறந்த கணவன், குடும்ப வன்முறை குற்றத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

ஆத்திரம் அடைந்த மனைவி, பிரேவுடன் கடுமையான வாக்குவாத்தில் ஈடுபட்டார்.
அப்போது மனைவியை தள்ளி விட்டுள்ளார். இந்த பிரச்னை பெரிதானதால், குடும்ப வன்முறை சட்டத்தின் கீழ் பிரேவை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைந்தனர்.
இவற்றை நீதிமன்றம் கவனத்தில் எடுத்துக் கொண்டது. எனவே மனைவிக்கு பிறந்த நாள் வாழ்த்து அட்டை, பூக்களை வாங்கிக் கொண்டு இரவு உணவு சாப்பிட ஹோட்டலுக்கு அவரை அழைத்து செல்ல வேண்டும்.

மகளின் லேப்டொப்பை சுட்டுத்தள்​ளிய தந்தை...!!

இன்று வயது வேறுபாடு இன்றி அனைவரையும் face book  ஈர்த்துள்ளது ..!!
இதனால் பல நன்மைகள் காணப்படுகின்ற போதிலும் சில சந்தர்ப்பங்களில் சங்கடங்களும் உருவாகுவது உண்டு.

அதாவது 15 வயதுடைய "கன்னா" எனும் சிறுமி இந்த பேஸ்புக் சமூக வலைத்தளத்திற்கு அடிமையானதை பொறுக்க முடியாத கோபக்கார தந்தை தனது 0.45 மில்லிமீட்டர் கைத்துப்பாக்கியால் மகளின் லேப்ரொப்பை சுட்டுத்தள்ளியுள்ளார்.

அத்துடன் ஆறிவிடாத அவரது கோபம் அச்செயற்பாட்டை வீடியோ எடுத்து தனது மகளின் பேஸ்புக் பக்கத்திலேயே பதிவேற்றம் செய்தும் இருக்கின்றார்.

Friday, February 10, 2012

பெண்களின் கையில் புதுவித ஆயுதம்! பெப்பர் ஸ்ப்ரே..

பெண்களின் கையில் புதுவித ஆயுதம்! பெப்பர் ஸ்ப்ரே... திருடன்களிடமிருந்து தப்பிப்பதற்காக இப்போது பொதுமக்களுக்கு சென்னை, காவல்துறை அறிமுகப்படுத்தியிருக்கும் தற்காப்பு சாதனம்!

... ''அப்படியா..! அதென்ன 'பெப்பர் ஸ்ப்ரே..?' '' என்று ஆச்சர்யப்பட்டு கேட்பவர்களுக்கு பதில் அளிக்கிறார் சென்னை, துரைப்பாக்கம் சரகம் உதவி ஆணையர் கே.என்.முரளி!..."கண்களை எரியவைக்கும் தன்மையுள்ள, திரவ வடிவ பொருள், ஸ்ப்ரே செய்யும் வசதியோடு இருக்கும் சாதனம்தான் 'பெப்பர் ஸ்ப்ரே'.

ஈவ் டீஸிங், வழிப்பறி திருடர்கள், வீடு தேடிவரும் திருடன்கள் என்று எதிரிகளின் கண்களில் சமயோஜிதமாக செயல்பட்டு இதை ஒருமுறை ஸ்ப்ரே செய்துவிட்டால் போதும், கண் எரிச்சலில் தவிக்கும் அந்த நபரால் இரண்டு மணி நேரத்துக்கு எழவே முடியாது. "இந்த 'பெப்பர் ஸ்ப்ரே' 35 கிராம் எடை கொண்டது. இருபதுமுறை ஸ்ப்ரே செய்யலாம். விலை 500 ரூபாய். எதிராளி எட்டடி தூரத்தில் இருந்தாலும் இதைப் பயன்படுத்தலாம். அதேசமயம், இதைப் பயன்படுத்துபவர்கள் மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டும். குறிப்பாக குழந்தைளின் கைகளில் கொடுத்துவிடக்கூடாது!" என்றார்.

அதற்குள் 'அவசர போலீஸ் 100' எண்ணுக்கு தகவலைச் சொல்ல வேண்டும். நாங்கள் வந்து அவர்களை அள்ளிக்கொள்வோம்! தேவைப்பட்டால் குற்றவாளிக்கு மருத்துவ சிகிச்சை அளித்து, சட்டப்படி நடவடிக்கை எடுப்போம்" என்று உற்சாகமாகச் சொன்ன முரளி,..."அமெரிக்காவில் வழிப்பறிக் கொள்ளை அதிகம் என்பதால், அவர்களிடம் இருந்து தற்காத்துக்கொள்ள பொதுமக்களுக்கு காவல்துறையின் மூலமே 'பெப்பர் ஸ்ப்ரே' வழங்கப்படுகிறது.


பேஸ்புக்கில் 20 மில்லியன் டாலருக்கு மகனை விற்கும் தந்தை!!!...



பேஸ்புக்கில் இருக்கும் சில விஷயங்கள் படிப்பவர்களை மிகவும் பிரம்மிக்க வைக்கிறது. சவுதி அரேபியாவை சேர்ந்த சவுத் பின் நாசர் அல் ஷாஹ்ரி என்பவர் பேஸ்புக்கில் தனது மகனை விற்க விளம்பரப்படுத்தி இருப்பதாக ஒரு செய்தி வெளியாகி உள்ளது. உலக அளவில் உள்ள தொழில் நுட்பங்களில் கூட பண நெருக்கடி விளையாடுகிறது. அப்படி பண நெருக்கடி ஏற்பட்டதால் இவர் தனது மகனை விற்க முடிவெடுத்தாக கூறி இருக்கிறார்.

இவரது மகனின் விலை 73 மில்லியன் யூஏஇ திறாம்ஸ் (20 மில்லியன் டாலர்) என்று ஃபேஸ்புக்கில் கூறி இருக்கிறார். இது போன்று திகைக்க வைக்கும் சில விஷயங்கள் ஃபேஸ்புக்கில் வெளியாகின்றன.

ஏழ்மை நிலையில் இருப்பவர்கள், தனது சொந்த வாழ்கை பற்றி பகிர்ந்து கொள்ள நினைப்பவர்கள் என்று ஃபேஸ்புக்கில் வெளியாகும் செய்திகள் ஒவ்வொன்றும் ஒரு விதம். வீடு இல்லாத ஒரு பெண் மணி தனது வாழ்க்கை சூழலை பகிர்ந்து கொண்டதன் விளைவாக அவருக்கு ஃபேஸ்புக் ஃபாலோவர்கள் மூலம் நிறைய உதவிகள் கிடைத்தது. இந்த செய்தி பெரிய அளவில் பேசப்பட்டது. அதற்கு அடுத்தபடியாக சவுதி அரேபியா மனிதர் தனது மகனை விற்க தயாராக இருக்கும் இந்த செய்தி, படிப்பவர்களை ஆச்சர்யத்தில் மூழ்கடிக்கும். இப்படி சோஷியல் மீடியாவின் பயன்பாடு தினம் தினம் வித்தியாசப்படுகிறது. மக்கள் இதன் மூலம் நிறைய பயனடைவார்கள் என்று பெரிதும் எதிர் பார்க்கப்படுகிறது.

ஆனந்தம் என்பது தனக்காக வைத்துக் கொள்வதிலல்ல


 
கனடாவில் ஆலன்- வயலட் லார்ஜ் என்ற ஒரு முதிய தம்பதியர் வசிக்கிறார்கள்.அவர்களுக்கு ஜாக்பாட்(2010 வருடம் ) அடித்தது! நிஜமாகவே ஜாக்பாட். லாட்டரியில் 11.2 மில்லியன் டாலர்கள். தோராயமாய் கணக்குப் போட்டுப் பார்த்தால் 55 கோடி ரூபாய் என்று வைத்துக் கொள்ளலாம். விஷயத்தைக் கேள்விப்பட்டபோது அவர்கள் சிலிர்த்தார்கள்.

ஆனால் அவர்களுடைய மனம் அந்த லாட்டரிப் பணத்தை விட வெகு விசாலமாய் இருந்தது. 'இந்த பரிசுத் தொகையை முழ...ுமையாய் ஏழைகளுக்கே அளிக்கிறோம்' என்று அவர்கள் அறிவித்தனர். உலகமே வியந்தது. மருத்துவமனைகள், புற்றுநோய் சிகிச்சை, காப்பகங்கள் என பல இடங்களுக்கு இந்தப் பரிசுத் தொகை பகிர்ந்தளிக்கப்பட்டது!

ஆனந்தம் என்பது தனக்காக வைத்துக் கொள்வதிலல்ல, பகிர்தலில் என்பதைப் புரிந்து கொண்டதுதான் அந்த தம்பதியரின் வெற்றி. அவர்களுடைய வாழ்க்கை நிச்சயம் ஆனந்தத்தின் வீதிகளில் இளைப்பாறும் என்பதில் சந்தேகமில்லை.இன்று எவ்வளோ பேர் இந்த மாதிரி இருப்போம்...இவர்களை பாராட்ட வார்த்தைகளே இல்லை .. !!!

உணவு அன்புடன் .........


ஒரு நோயாளியை மருந்து பாதி குணப்படுத்துகிறது என்றால்
 
அந்த மருந்து தன்னைக் குணப்படுத்தும் என்ற நம்பிக்கைதான் மீதி நோயைக் குணப்படுத்துகிறது.அது போல உணவு சுமாராக இருந்தாலும் ,அதை அன்புடன் பரிமாறும் போது அதன் சுவை மேலும் அதிகரிக்கும்.

உறவுகளுக்குள் அன்பு குறைந்து போனதால் உணவின் சுவையும் குறைந்து போனது. அன்பு குறைந்து போனதற்கு ஆயிரம் காரணங்களைச் சொல்லலாம் ஆயினும் பணத்தை மட்டுமே இலக்காகக் கொண்ட எந்திரத...்தனமான வாழ்க்கையும் ஒரு முக்கியமான காரணமாக அமைகிறது.எந்திரம் போல நாம் வாழ்வதால் பாராட்டத் தவறிவிடுகிறோம்.

இன்றைய சூழலில் அவசர வாழ்க்கையில், அவசர உணவு முறைக்கு மாறிவிட்ட நம்மில் சிலருக்கு,சமைத்தல் என்பதும் அதுவும் சுவையாக சமைத்தல் என்பதும் வியப்பான ஒன்றாகவே இருக்கும்.
மாறாக சுவை குறைவான உணவும் அன்புடன் பரிமாறப்படும் போது சுவை கூடும் என்பதும், பாராட்டும் போது உணவின் தரம் மேம்படும் என்பதும் அவர்கள் உணர்ந்தால் ,
உணவு விசமாகாது!!
விசம் உணவாகும்.!!!

Thursday, February 9, 2012

காதலித்த பெண்ணை நண்பர்களுடன் சேந்து அனுபவித்த காதலன்.

பல்லாவரத்தை சேர்ந்த சரண்ஜா,  என்பவரே இந்த நிலைக்கு ஆள்ளகியுள்ளார்.
   இவர் தனது காதலனை சந்திக்க அவனது வீட்டிக்கு
 சென்றவேளையில்,   தனது காதலனும் ,அவனது நண்பர்களும்
      மதுபோதையில் இருதுள்ளனர்.
    விடயம் தெரிந்து தப்பிக்க முயட்சிசெய்த சரண்யா,
           நண்பர்களாக சேர்ந்து மடக்கி பிடித்துள்ளனர்.    இருவர் சரண்யாவை பிடிக்க ஒருவர் சரான்ய வாயுனுள் மதுவை ஊற்றி மயக்கமடைய செய்து
  கற்பழித்துள்ளனர்.

மறுநாள் காலையில் மயக்கம் தெளிந்த சரண்யா,  தான் கற்பழிக்கப் பட்டத்தை எண்ணி கதறியுள்ளார்.
  பின்பு காவதுரையில் முறைப்பாடு செய்யப்பட்டு,    காதலனும் அவனது நண்பர்களும் கைதுசெய்யப்பட்டன.

கழிவறையில் சம்பவம்


ஒரு பெண் குழந்தை ஒன்றை கழிவறையில் பிரசவித்து விட்டு அதனை அருகில் இருந்த குப்பை தொட்டி ஒன்றில் ஒருவருக்கும் தெரியாமல் மறைத்து வைத்துவிட்டு.

ஒன்றும் நடக்காதது போல தன்னை அலங்கரித்து விட்டு வீதியால் நடர்ந்து சென்ற சம்பவம்  அண்மையில் நடைபெற்றுள்ளது.


Wednesday, February 8, 2012

திருமணமான ஆணிடம் மயங்கும் பெண்கள் .....

தன் அப்பாவின் குணாதிசயங்களால் ஈர்க்கப்பட்டு, அவர் மீது மிகுந்த அன்பும், பாசமும் கொண்ட பெண்கள் பலர் தனக்கு வரப்போகும் கணவனு க்கும் அதே மாதிரி குணங்கள் இருக்க வேண்டுமென எதிர்பார்ப்ப துண்டு. இத்தகைய குணாதிசயங்களுடன் ஒரு ஆணை சந்திக்கும் பெண், அவனையே தன் வாழ்க்கைத் துணையாக்கிக் கொள்ள நினைக்கிறாள். அவனுக்கு ஏற்கனவே நடந்த திருமணம் அவளுக்கு ஒரு பொருட்டாக இருப்பதில்லை.  குழந்தை உள்ளம் கொண்ட பெண்கள் இம்மாதிரி உறவுகளுக்கு சுலபமாக அடிமையாகி விடுவதுண்டு. 
 
அவளது குழந்தைத் தனங்களையும், தவறுகளை யும் சகித்துக் கொள்ள தன்னைவிட பல வயது மூத்த ஆணை நாடுகிறாள்.
பெற்றோரின் அன்பும், அரவணைப்பும் கிடைக்கப் பெறாத பெண்கள் பருவ வயதை அடைந்ததும் அந்த அன்பும், அரவணைப்பும் திருமணமான ஒரு ஆணிடம் கிடைக்கும் போது அவனிடம் தன்னை இழக்கிறாள். 
 
உடல் மற்றும் இனக்கவர்ச்சிகளும் இத்தகைய உறவுகளுக்கு ஒரு காரணம். திருமணமான ஆணிடம் சாதாரண நட்பாக ஆரம்பிக்கும் இப்பழக்கம் நாள டைவில், காதலாகி, உடலளவில் நெருங்கவும் வாய்ப்புகள் அதிகம்.
 
மயங்கும் பெண்கள் .....

ஆபாச படம் பார்த்த அமைச்சர்கள்

பெங்களூர் : கர்நாடக சட்டப்பேரவை கூட்டத்தில் செல்போனில் ஆபாச படம் பார்த்த அமைச்சர்கள் லட்சுமண் சவதி, சி.சி பாட்டீல் மற்றும் கிருஷ்ண பாலேமர் நேற்று ராஜினாமா செய்தனர்.

அமைச்சர் லட்சுமண் சவதி செல்போனை வயிற்றின் கீழ் மறைத்து வைத்துக் கொண்டு அதையே பார்த்துக் கொண்டிருந்தார். அவர் அருகிலிருந்த மகளிர் நலத்துறை அமைச்சர் சி.சி.பாட்டீலும் செல்போனை எட்டிப் பார்த்து கொண்டிருந்தார். அவர்களின் ஆர்வத்தை டிவி கேமராவில் ‘ஜூம்‘ செய்து பார்த்தபோது, அவர்கள் ஆபாச படம் பார்த்தது வெளிச்சத்துக்கு வந்தது. அமைச்சர்கள் ராஜினாமா செய்ய வேண்டும் என்று சித்தராமையா, மஜத தலைவர் குமாரசாமி உள்ளிட்டோர் வலியுறுத்தினர். இதை முதலில் அமைச்சர் லட்சுமண் சவதி மறுத்தார். செல்போனில் தனக்கு அமைச்சர் கிருஷ்ண பலேமர் அனுப்பிய எஸ்எம்எஸ்,ஐ பார்த்ததாக கூறினார். இதையடுத்து, சர்ச்சையில் பலேமரும் சிக்கினார்.

இதற்கிடையே அமைச்சர்களின் ராஜினாமா கடிதங்களை  ஆளுநர் ஏற்றுக் கொண்டார்.

தங்க to 
http://www.dinakaran.com/2012_new/News_Detail.asp?Nid=2067

Monday, February 6, 2012

இதயமின்றி வாழ்ந்துகொண்டிருக்கும் மனிதர்

இதயத்தில் ஏற்பட்ட மாற்றமுடியாத நோயினால் தனது வாழ்நாளின் இறுதிக்கட்டத்தில் வாழ்ந்து கொண்டிருந்த கிரே லெவிஸ் எனும் 55 வயதுடைய மனிதர் இன்று இதயமே இன்று புத்துணர்வுடன் வாழ்ந்து வருகின்றார்.

கடந்த வருடம் இருதய நோயினால் பாதிக்கப்பட்டிருந்த குறித்த நபருக்கு டெக்சாசிலுள்ள இருதய நிறுவனத்தில் வேலைசெய்யும் இரு வைத்தியர்களின் முடிவே அவரின் எதிர்காலத்தை தீர்மானித்தது.

சிகிச்சையின் போது இதயம் முற்றாக அகற்றப்பட்டு இதயத்தை போலவே செயல்படக்கூடிய "contunuos flos" எனப்படும் செயற்கை உபகரணம் பொருத்தப்பட்டது. இந்த உபகரணம் இதயம் போன்று துடிப்பதில்லை எனினும் இதயத்தை போன்றே அனைத்து செயல்பாடுகளையும் மேற்கொள்ளவல்லது.

கர்ப்பமான காரினகபூர்!!

நடிகை கரீனா கபூருக்கும், நடிகர் சயீப் அலிகானுக்கும் அடுத்த மாதம் திருமணம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. திருமண நிச்சயதார்த்தம் வருகிற 10-ந்தேதி நடைபெற உள்ளது.

    இதற்கு முன்னர்,''காரின கபூர் '' கற்பமாக உள்ள விடயம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தித்யுள்ளது.
           இவர்களது பலவருட காதல்  வாழ்க்கை காரணமாக  இருக்கலாம் என சினிமா வட்டாரங்கள் தெருவிக்கின்றன. இது தொடர்பாக ''காரின கபூர் ''
கூறுகையில் இது பொய்யான தகவல் எனக்கூறி மளுப்பியுள்ளார்.

டேபிள் டெனிஸிஸ் விளையாடும் குழந்தை ....

Jamie Myskova-Buddell எனப்படும் இக்குழந்தை,  பிறந்து 18  மாதங்கலேதான்.
   இந்த சுட்டிக்குழந்தை மிகவும் திறமையாக விளியாடுகின்றதாம்.
இவன், தனது தந்தையுன்,  சேந்து விளையாடி பயிட்சிகளை மேட்கொள்வதை படத்தில் காணலாம்.

இவன் வருங்காலத்தில் ஒரு நட்சத்திரமாக,  திகள்வாநென பார்பவர்கள் கருத்து தெருவிக்கின்றனர்.