Facebook சமூக தளம் வெறும் பொழுதுபோக்குக்கானது என்ற நிலையிலிருந்து விடுபட்டு, வேறு பல புதிய சேவைகளையும் தரத் தொடங்கியுள்ளது.
அவ்வகையில் தற்போது விலை மதிப்பற்ற மனித உயிரைக் காக்கும் புதிய அவதாரத்தை எடுத்துள்ளது. Facebook உறுப்பினர்கள் உடலுற...ுப்பு தானம் செய்ய முன்வருபவர்களாக இருந்தால், அந்த தகவலை அவர்களது தளத்தின் முதல் பக்கத்தில் குறிப்பிட வேண்டும் என Facebook நிறுவனரும் தலைமை அதிகாரியுமான மார்க் ஜக்கர்பர்க் வேண்டுகோள் விடுத்துள்ளார். சிறுநீரகம் உள்ளிட்ட மாற்று உறுப்புக்கள் கிடைக்காததால் அமெரிக்காவில் ஒவ்வொரு நாளும் 18 பேர் இறக்கின்றனர் என்ற செய்தி தன்னை கவலை அடைய வைத்ததாகவும், இதை மாற்றுவதற்காகவே புதிய வசதியை Facebook மூலம் தர உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இதற்கு வசதியாக, சிறுநீரகங்கள் உள்ளிட்ட உறுப்புகளை தானம் பெற்று பாதுகாத்து வைக்கும் நிறுவனங்களைத் தொடர்பு கொள்வதற்கான இணைப்பும் இத்தளத்தின் மூலமாகவே பெற முடியும். ஜக்கர்பர்க்கின் இந்த வேண்டுகோள் வெளியாகி, ஒரு சில நாளிலேயே பெரும் வரவேற்பு கிடைக்க தொடங்கியுள்ளது. இண்டியானாபொலசில் உள்ள ஒரு நிறுவனத்தில், ஒரே நாளில் ஆயிரத்து 400 பேர் சிறுநீரக தானம் தருவதாக பதிவு செய்துள்ளனர். அமெரிக்காவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த சேவைக்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், இந்த நடைமுறை இந்தியா உள்ளிட்ட மற்ற நாடுகளிலும் விரைவில் கிடைக்குமானால், இந்தியாவிலும்.... குறிப்பாக, தமிழகத்தில் செங்கல்பட்டைச் சேர்ந்த ஹிதேந்திரன் மரணத்தை ஒட்டி தொடங்கிய உடல்உறுப்பு குறித்த விழிப்புணர்வு அடுத்த கட்டத்தை எட்டும் என நம்பலாம்...
அவ்வகையில் தற்போது விலை மதிப்பற்ற மனித உயிரைக் காக்கும் புதிய அவதாரத்தை எடுத்துள்ளது. Facebook உறுப்பினர்கள் உடலுற...ுப்பு தானம் செய்ய முன்வருபவர்களாக இருந்தால், அந்த தகவலை அவர்களது தளத்தின் முதல் பக்கத்தில் குறிப்பிட வேண்டும் என Facebook நிறுவனரும் தலைமை அதிகாரியுமான மார்க் ஜக்கர்பர்க் வேண்டுகோள் விடுத்துள்ளார். சிறுநீரகம் உள்ளிட்ட மாற்று உறுப்புக்கள் கிடைக்காததால் அமெரிக்காவில் ஒவ்வொரு நாளும் 18 பேர் இறக்கின்றனர் என்ற செய்தி தன்னை கவலை அடைய வைத்ததாகவும், இதை மாற்றுவதற்காகவே புதிய வசதியை Facebook மூலம் தர உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இதற்கு வசதியாக, சிறுநீரகங்கள் உள்ளிட்ட உறுப்புகளை தானம் பெற்று பாதுகாத்து வைக்கும் நிறுவனங்களைத் தொடர்பு கொள்வதற்கான இணைப்பும் இத்தளத்தின் மூலமாகவே பெற முடியும். ஜக்கர்பர்க்கின் இந்த வேண்டுகோள் வெளியாகி, ஒரு சில நாளிலேயே பெரும் வரவேற்பு கிடைக்க தொடங்கியுள்ளது. இண்டியானாபொலசில் உள்ள ஒரு நிறுவனத்தில், ஒரே நாளில் ஆயிரத்து 400 பேர் சிறுநீரக தானம் தருவதாக பதிவு செய்துள்ளனர். அமெரிக்காவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த சேவைக்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், இந்த நடைமுறை இந்தியா உள்ளிட்ட மற்ற நாடுகளிலும் விரைவில் கிடைக்குமானால், இந்தியாவிலும்.... குறிப்பாக, தமிழகத்தில் செங்கல்பட்டைச் சேர்ந்த ஹிதேந்திரன் மரணத்தை ஒட்டி தொடங்கிய உடல்உறுப்பு குறித்த விழிப்புணர்வு அடுத்த கட்டத்தை எட்டும் என நம்பலாம்...

