Monday, January 30, 2012

பாதிபிலாமல் பேசுவதற்கு ....

மனிதனோடு இணைந்த தவிர்க்க முடியாத இனொரு உருப்புபோல் கைதொலைபேசி மாறி வருகின்றது.  இதனால் காது கேட்கும் திறன் பாதிக்கலாம் என அண்மையில் நடைபெற்ற ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது.
       அதனால் நமது காதுகளை பாதிக்காதவாறு, தொலைபேசிகளை    பயன்படுத்தும் முறைகளை பார்க்கலாம்.

*தவிர்கமுடியாத நேரங்களில் மிகக் குறைந்த கால அளவு மட்டும் கைத்தொலைபேசியில் பேசுங்கள்.
*தரமான நிறுவனங்கள் தயாரித்த கைதொளைபேசிகளை மட்டும் பாவியுங்கள்.   குறைந்த மின்காந்த கதிர்வீச்சு கொண்ட பேசிகளை மட்டும் உபயோகியுங்கள்.
*நேரடியாக கைத்தொலைபேசிகளில் உரையாடுவதை தவிர்த்து ,
     ஷ்ச்பீகர்,  ஹியரின் போன்   உபயோகித்து உரையாடுவது நல்லது.
*குழந்தைகள் , கர்ப்பிணிகள் கைத்தொலைபேசியில்  பேசுவதை தவிர்த்தல் நல்லது .
*பழுதடைந்த தொலைபேசிகளை பயன்படுத்துவதை தவிர்த்தல்.
* கைத்தொலைபேசிக்கு பதிலாக மின்னஞ்சல், தொலைபேசிகளை உபயோக்கலாம்.
*கைதொலைபேசி பற்றரி வளுவிளந்தபோது பேசுவதை தவிர்த்தது,
    முழுமையாக  சார்ஸ் செய்து பேசுதல் நல்லது.

YOU TUBE


பல்வேறு இணைய தளங்கள் மற்றும் மேன்போருக்களின் உதவியுடன்
youtube  விடியோக்களை mp3 ,mp4 வடிவில் தரவிறக்கம் செய்யலாம் .

             இருபினும் மிக எளிதாக ஒரே சொடுக்கில் youtube  விடியோக்களை
தரவிறக்கம் செய்வதற்கு ஒரு வழி உள்ளது.
YTBYCLICK என்ற டூல்வார் மூலம் youtube தளத்தில் இருந்து விடியோக்களை
தரவிறக்கம் செய்யலாம்.   இதனை குரோம் ,இண்டநெட் எக்ச்புலோர் ,
போன்ற உலாவிகளில் நிறுவ முடியும்.

தெரிவு செய்யப்பட்ட விடியோக்களை தரவிறக்கம் செய்ய டூல்வார், உள்ள
icon  i கிளிக் செய்தால் போதும்.   உங்கள் புதிய பக்கத்தில் நீங்கள் தெரிவு  செய்த விடியோ தரவிறங்க தொடங்கும்.



இணைய முகவரி



புகைப்படங்கள் இனிபேசுமே!!

உங்கள் புகைப் படங்களை பேசவைக்க ''CRAZTALK ''  என்னும் மென்பொருள் வெளியாகியுள்ளது.

உங்க புகைப்படங்கள் மட்டுமல்ல, இறந்தவர்களின் புகைப்படங்களையும்
இனிபேச  வைக்கலாம்.
    நம்பமுடியவில்லைய?  இந்த மென்பொருள் மூலம் இதை நியமாகலாம்.
CAMERA வால் எடுக்கப் பட்டாலும் சரி,  SCANNER  மூலம் பெறபட்டாலும் பரவாயில்லை. 

எலி, பூனை ,நாய் போன்ற மிருகங்களும் உங்களுடன் பேசவைத்து பார்க்கலாம். ஏன் உங்கள் கற்பனை உருவங்களையும்  பேச வைக்கலாம்.
    நீங்களும்   செய்து பாருங்கள்.,,    உங்களுக்கே புரியும் .

Sunday, January 29, 2012

facebook

facebook  U.S.A.TUDAY

அமெரிக்காவில் இருந்து இயங்கி வரும்'' U.S.A.டுடே''
  என்னும் பத்திரிக்கை நிறுவனத்தின் facebook  மூலம்
தாம் வெளியிடும் செய்திகளை உடனுக்கு உடன் பயனாளர்களை
  சென்றடையும் வகையில்  புதிய USA TODAY+ me  என்ற         '''
timeline ''  மென்பொருளை வெளியிட்டுள்ளது .
 
இதன் மூலம் சுவாரஸ்யமான செய்திகளை பகிவத்தோடு.
   உங்கள் நண்பர்களுக்கும் பகிர முடியும்.
இதில் நீங்கள் விரும்பியவாறு , தோற்றத்தை மாற்றும் (filter)
    வசதியும் காணப் படுகின்றது.
  

உயிரினங்கள் முதலில் செவ்வாய் கிரகத்தில் தோன்றின.

 ஆஸ்திரேலியாவின் மேற்குப் பகுதியில் உள்ள பில்பார மாகாணத்தில் கடைகோடி பகுதியில் ஸ்டேர்லி ஏரி   உள்ளது.
    அங்கு சுமார்   3 கோடியே  40  லட்சம் ஆண்டுகளுக்கு முந்தய புதை பொருள்கள் கண்டெடுக்கப்பட்டன.
     ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக நிபுணர்கள் அவற்றை ஆய்வு செய்தனர்.
      அப்போது அதில் நல்ல முறையில் வளர்ச்சி அடைந்த நோய் ஏற்படுத்தும் பக்டிரியாக்கள் இருந்தன.
       அதை புதை பொருள்களில் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட இந்த 
 பக்டிரியாக்கள்  3 கோடியே  40  லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தவை. அப்போது பூமில் உயிர் வாழ்வதற்கான ஒட்சிசன் கிடைக்கவில்லை. கடல் நீரால் மட்டுமே பூமி சூழப்பட்டு இருந்தது.
        உயிர் வாழக்கூடிய வெப்ப சூழ்நிலை இல்லை. ஏனவே உயிரினம் செவ்வாக்கிரகத்தில் தான் தோன்றியிருக்க வேண்டும் ஏன நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
        புதை படிவம் கண்டெடுக்கப்பட்ட பல்பாரா பகுதி செவ்வாய் கிரகத்தில் இருந்து விழுந்து வண்டல் மண் சார்ந்த பாறைகளாக இருக்கலாம்.
        அவை மண்ணில் புதையுண்டு படிவங்களாக மாறியிருகின்றன என்று கருதப்படுகிறது.


நீண்ட அலகுடன் கூடிய கோழிகளை உருவாக்கி ஆய்வாளர்கள் சாதனை !!

பொதுவாக கோழிகளுக்கு சிறிய அலகு இருக்கும்.
அதன் மூலம் உணவை உட் கொள்ளுகின்றன. ஆனால் ''கார்வேர்டு ''
   பல்கலைகழகத்தை சேர்ந்தஉயிரியல் பரிணாம வளர்ச்சி விஞ்னானி  "அர்கத் அபாஷ்நெங்" தலைமையிலான நிபுணர் குழுவினர் புதுவிதமாக ஆய்வு 
மேற்கொண்டனர்.  
      கோழிக் கருவில் உள்ள டி. என்.ஏ மூலக் கூறில் சிறிது மாற்றம் செய்து முதலையின் நீளமான தாடை போன்ற அலகை உருவாக்கியுள்ளனர்.
     கோழி முட்டையில் சிறிய துவாரமிட்டு அதற்குள் சிறிய பாசிமணி  அளவிலான புரோட்டீனை செலுத்தினர். அதைத் தொடர்ந்து முட்டைக்  கருவின் வளர்ச்சியைக் கண்காணித்தனர். 14 நாள்களுக்குப் பிறகு கோழியின் அலகு  முதலையின் தாடை போன்று நீளமாக வளர்ந்தது.
       பறவைகள் மற்றும் விலங்குகளின் உடல்கூறு இயல் குறித்து அறிய இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாக விஞ்னானி அபாஷ்நெங் தெரிவித்தார்.
      இந்த சோதனை சுமார்  6  1 / 2 கோடி ஆண்டு பரிணாம வளர்ச்சி வரலாற்றில் முக்கியமானதாகக் கருதப்படுகின்றது.


  
       

எய்ட்ஸ் நோயை குணப்படுத்த விரைவில் தடுப்பூசி

எய்ட்ஸ் நோயை குணப்படுத்த இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. இது தொடர்பாக மருத்துவ அதிகாரிகள் 
பல்வேறு வித ஆராய்ச்சில் ஈடுபட்டு வருகின்றனர். 
இப்போது நம்பிக்கைதரும் வகையில் விஞ்ஞானிகள்  ஒரு தகவல் வெளியிட்டுள்ளனர்.

விரைவில் எய்ட்ஸ் நோயை கட்டுப்படுத்த தடுப்பூசியை உருவாக்கி
விடுவோம் என்று அறிவித்துள்ளனர் .
மனிதன் உடலில் இயற்கையாகவே நோய் எதிர்ப்பு சக்திகள் உள்ளன .
    இதில் அதிக திறன் கொண்ட  17 மூலக்கூறுகளை  விஞ்ஞானிகள்
        கண்டுபிடித்துள்ளனர் .
இதை மேலும் மேம்படுத்துவதன் மூலம் எய்ட்ஸ் நோயையும் மனிதர்களுக்கு ஏற்படாமல் தடுத்து விடலாம் என்று அவர்கள் கூறியுள்ளனர் .


எனவே இந்த மூலக் கூறுகளை மேலும் வீரியாமாக்க  தடுப்பூசி மருந்தை உருவாக்கி வருகின்றனர்.
விரைவில் இந்த மருந்து கண்டுபிடிக்கப்பட்டு பயன்பாட்டிக்கு கொண்டு
    வரப்படும் என்று அவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

இதனால் எய்ட்ஸ் நோயை முன் கூட்டியே தடுத்து முற்றிலு விரட்டி விடலாம் 
     என்று அவர்கள் தெரிவிக்கின்றனர்.
                                
இந்த தகவல் மருத்துவ அறிக்கை ஒன்றில் வெளியிடப்பட்டுள்ளது.  
    

Thursday, January 26, 2012

நுரையிரல் புற்று நோயைக் கண்டறியும் மோப்ப நாய்கள்

மனிதர்களின் சிறந்த நண்பர்களான நாய்கள் திகழ்கின்றன .
  இவை தமது எஜமானர்களுக்கு ,  நன்றியுடனும் விசுவாசத்துடனும்
    இருக்கின்றன .

எனவே நாய்களை கொண்டு, மனிதர்களின் நுரையிரல் புற்று நோயை கண்டு பிடிக்கலாம் என விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.
   யேர்மனியில் உள்ள ``ச்கில்லர் ஜோக்``  என்ற வைத்தியசாலை நிபுணர்கள் நாய்களின் முலம் ஆறட்சியை மேட்கொண்டுள்ளனர்..

அவை தமது மோப்ப சக்கி முலமாக, மனிதர்களின் மூக்கு வழியாக வெளியேறும் சுவாசத்தின் மூலமாக நுரையிரல் புற்று நோயை கண்டறிய முடியும் என வைத்தியர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
இதன் மூலம் நோய் அறிகுறி தொடங்கும் நிலையில் உள்ள
71 % நுரையிரல் புற்று நோயை தெரிந்து கொள்ள முடியும்.
 
அதற்கு முன்னோடியாக புற்றுநோய் சிகிச்சைக்கான மாத்திரைகளை
  மோப்பம் பிடிக்க செய்து பயிற்சி அளித்தனர் .
நுரையிரல் புற்று நோயை கண்டு பிடிக்க 2 ஜேர்மன்செர்பர்டு  , ஆஸ்திரேலியன் செர்பர்டு மற்றும் லாப்ராடர்  ரக நாய்களுக்கு பயிற்சி அளித்து வருகின்றனர்.