Friday, March 16, 2012

உங்களை நேசிக்கிற பெண் .....

 
உங்களை நேசிக்கிற பெண் நேருக்கு நேர் பார்க்க மாட்டாள். கடைக் கண்ணால் நோ க்குவாள். நீங்கள் பாராத சமயமாய்ப் பார் த்து மகிழ்வாள். உங்கள் மீது அக்கறையற் றவள்போல் பாசாங்கு செய்வாள். அவசி யமில்லாத நிலையிலும் அளவுக்கு மீறி இழுத்து போர்த்திக் கொள்வாள்.

நீங்கள் ஏதாவது கேட்டு வைத்தால் புன் முறுவலுடன் தலை குனிவாள். பொருள ற்ற வார்த்தைகளை உதிர்ப்பாள். ஆனால். உங்கள் அருகாமையை விரும்புவாள் மணிக்கணக்கில் மௌனமாய் ...அமந்திருப் பாள்.

அவள் தொலைவில் உங்களை கண்டதும் தனது தோழிகளிடம் அவர் என் னைப்பார்தர்னா சொல்றீங்.. என்று கே ட்டு உங்கள் கவனத்தை ஈர்ப்பாள். உங்க ளை போகவிட்டு சிரிப்பாள். உங்கள் முன்னிலையில் யாருடைய குழந்தை யையும் எடுத்துக் கொஞ்சுவாள் முத்த மிடுவாள்.

அவளுடைய உடம்பினை ஒவ்வோர் அங்கமும் உங்கள் மீது அவள் கொண்டி ருக்கும் காதலை வெளிப்படுத்தும்.
 
ஏதாவது ஒரு சாக்கு வைத்துக்கொண்டு உங்கள் வீட்டுக்கு வருவாள். தன்னை விசேசமாய் அலங்கரித்துக் கொண்டிருப்பாள். அவளுடைய கை க்குட்டை சூடிய மலர். மோதிரம் போன்ற சின்னச் சின்னப் பொருள் களில் ஒன்றை உங்களுக்கு தரும்படி விரும்பிக் கேளுங் கள். முதலில் சற்று தயங்கினாலும் பிறகு மறுக்க மாட்டாள்.

அவளுக்கு நீங்கள் வாங்கித் தந்த ஆடை. அணிகளை எப்போதும் பிரியமாய் அணி ந்து கொள்வாள். ஒரு பெண்ணின் காதலை உறுதி செய்து கொள்ள இப்படி அநேக வழி கள்.

எப்படி வெல்கிறது…?

உங்களிடம் மிகுந்த நேசம் கொண்ட பெண் எதற்க்கும் தயராகிவீடுவாள். உங்களுடன் துயிலவும். உங்களை இரகசியமாய் மணந்து கொள்ளவும்.அவளுடன் நீங்கள் சதுரங்கம் ஆடும் போது தவறுதலாய் ஒரு காயை அவள் நகர்த்திவிட்டால் இது தப்பு என்று அவ ள் கையை பற்றுங்கள். பார்ப்பதற்க்க தவறை தடுக்கின்ற மாதிரி தெரிய வே ண்டும்.

அதையே சாக்காய் வைத்து நெடுநேரம் அவள் கையை விட மாட்டீர்கள். அவளு ம் அதை விடுவித்து கொள்ளவதற்க்கு முயல மாட்டாள். உங்களு க்குள் ஒரு புதிய நெருக்கம் ஏற்ப்பட்டிருப்பதை இருவருமே அப்போது உணர்வீர்கள்.

Wednesday, March 7, 2012

ஆழ்மனதைப் பற்றி சிறிது தெரிந்து கொள்ளலாம் வாருங்கள் நண்பர்களே ...!!!!

நமது ஆழ்மனம் நாம் விரும்பும் எதையும் நமக்கு கொடுக்கவல்லது! மனத்தில் இரண்டு நிலைகள் உண்டு.

1.மேல் மனம் (conscious Mind) அல்லது வெளிமனம்
...
2. ஆழ்மனம் ( Sub Conscious Mind)

.மேல்மனத்தை விடப் பல மடங்கு பெரியதும், ஆற்றல் மிக்கதும் ஆழ்மனம் ஆகும்.

மேல்மனம் என்பது விழிப்பு, உணர்வு நிலை எனப்படும். நினைவு நிலைக்கு இதுவே காரணமாகிறது. ஆனால் ஆழ்மனம் துயில் நிலைக்கும், துயிலுக்கும் விழிப்புக்கும் இடைப்பட்ட மெய்மறதி நிலைக்கும் காரணமானது ! அந்த காரணத்தை பற்றி காண்போம் .
 

நாம் படிப்பதும், பேசுதலும், செயல்படுவதும் மேல் மனத்தின் மூலமாகத்தான், ஆனால் என்ன படிக்கிறோம், ஏன் , எதற்கு ,எப்படிச் செயல்படுகிறோம் என்பதற்கெல்லாம், ஏன் , எதற்கு ,எப்படிச் செயல்படுகிறோம் என்பதற்கெல்லாம் காரணம் அடிமனம் தான் (ஆழ்மனம்)

எனவே நமது குறிக்கோள்களை நமது அடிமனம் ஏற்றுக்கொள்ளுமாறு எண்ணங்களைச் செலுத்த வேண்டும். நாம் செய்ய வேண்டியது இதுதான்.

நமது ஆழ்மனத்தோடு தொடர்பு கொள்ள வேண்டும்.

உங்கள் வாழ்க்கையின் குறிக்கோள்கள் என்ன என்பதை ஆழ்மனதிற்கு தெரிவிக்க வேண்டும்.

உங்கள் குறிக்கோள்களைத் தெளிவாகத் தெரிந்து கொண்ட ஆழ்மனம், அந்த குறிக்கோள்களை விரைவில் அடைய வழிமுறைகளைக் கண்டுபிடித்து, உடனே உங்களைச் செயல்படுத்த தூண்டும்.

நமது குறிக்கோள்களை ஆழ்மனத்திற்கு எப்படி கொண்டு செல்வது..
 

நமது எண்ணங்கள் எல்லாம் நமது குறிக்கோள்களைப் பற்றியதாகவே இருக்க வேண்டும்.

ஒரு நாளைக்கு ஒரு குறிப்பிட்ட வேளையில் (காலையில் 15 நிமிடங்கள்) குறிக்கோளை அடைவதற்கான மனப்பயிற்சியை செய்துவர வேண்டும். இந்த மனோபயிர்ச்சி செய்யும் போது மனதில் மற்ற நினைவுகளுக்குபங்கு அழிக்க கூடாது .

நமக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம், கண்ட குப்பை எண்ணங்களை எண்ணாமல், நமது குறிக்கோளைப் பற்றிய எண்ணங்களாகவே நினைக்க வேண்டும்

உதாரணமாக வீடு வேண்டும் என்றால் அந்த வீட்டில் (கற்பனை வீட்டில்) எத்தனை அறைகள் இருக்க வேண்டும். அதனுடைய அளவுகள் எப்படி இருக்க வேண்டும், எந்த அளவில் கதவுகள், வர்ணங்கள் என்ன என்பதை பற்றிய கற்பனைகளையே உங்களது எண்ணம் முழுவதும் நிரம்பியிருக்க வேண்டும். இப்படி காணும் ஒவ்வொரு கற்பனைகளும் உங்கள் மனதில் பதிந்து விடுகிறது அதை அப்படியே செயல் படுத்தமனம் தூண்டுகிறது .

உங்கள் மனதில் குறிக்கோள் விதையை வலுவாக ஊன்றுங்கள்... அதை உங்களது தீவிர எண்ணங்களால் உரமேற்றுங்கள்.. நிச்சயம் உங்களது குறிக்கோளை அடைந்துவிடுவீர்கள். விதைத்ததையே அறுவடை செய்து விடுவீர்கள் என்பது நிச்சயம்.
 


உங்களது கற்பனையில் உங்களது குறிக்கோளை ஒரு படமாக மாற்றி அதை உங்கள் மனத்திரையில் ஓட்டிப் பார்க்க வேண்டும். என்ன நினைக்கிறீர்களோ அதை அப்படியே செய்து முடிப்பதாக நினக்க வேண்டும். உதாரணத்திற்கு ஒரு புதிய வீடு கட்ட வேண்டும் எனில், கற்பனையில் வீடுகட்டி அதற்கு கிரகப்பிரவேசமும் செய்து முடித்ததாக எண்ண வேண்டும்.. உங்கள் கற்பனை எண்ணங்கள் மேலோங்கி , எண்ணங்கள் வலுப்பெற்று அது உண்மையாகவே நடக்க ஆரம்பித்துவிடும்.

குறிக்கோள்களை அடைவதற்கு, தற்காலத்தில் அனுபவிக்கக் கூடிய சிறுசிறு சுகங்களை தியாகம் செய்யவும் தயங்கக் கூடாது.

உங்கள் ஆழ்மனத்தை, பிடிவாதத்துடன் நம்ப வைத்துவிடுங்கள். ஆழ்மனம் வெகு சீக்கிரம் உங்கள் குறிக்கோளில் கொண்டு சேர்த்துவிடும்...
 

உங்களது குறிக்கோளை தெளிவாக ஒரு அட்டையில் எழுதி அதை நாம் அதிகம் பார்க்கும் இட்டங்களில் பதித்து விட வேண்டும் உங்கள் கண்களில் அடிக்கடி படும்படியாக வைத்துக் கொள்ள வேண்டும். அதைப் பார்க்கும் போதெல்லாம், எண்ணங்கள் உங்கள் குறிக்கோளின் மீது குவியட்டும். அப்படி நாம் குவிக்கும் மனம் நம்மை அந்த நன் செயலுக்கு காரணமாக மாற்றி அந்த செயலை நமக்கு பரிசு அளிக்கிறது .

எனவே நாம் நமது குறிக்கோளைத் தெளிவாக ஒரு காலவரையில் முடித்தே தீருவேன் என்று முதலில் தீர்மானித்துக் கொள்ளுங்கள். பின்பு ஆழ்மனத்துடன் தொடர்பு கொள்ளுங்கள். வெற்றி நிச்சயம் !

மேலும் தன்னம்பிக்கையே ஒருமனிதனை வெற்றிக்கு அழைத்து செல்லும் தாரக மந்திரம் அல்லவா ....?. அந்த தன்னம்பிக்கையின் எதிரி யார்,,,,,? என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்துகொள்ளுங்கள்.

மூக்குத்தி அணிவது ஏன்?

மூக்கு குத்துவது, காது குத்துவது துளையிடுவது உடலில் உள்ள வாயுவை ,காற்றை வெளியேற்றுவதற்கு. கைரேகை, ஜோசியம் பார்ப்பவர்கள் ஆண்களுக்கு வலது கையும் பெண்களுக்கு இடதுகையும் பார்த்து பலன் கூறுவது வழக்கம். ஆண்களுக்கு வலப் புறமும் பெண்களுக்கு இடப் புறமும் பலமான, வலுவான பகுதிகளாகும்.

ஞானிகளும் ரிஷிகளும் தியானம் செய்துபோது வலது காலை மடக்கி இடது தொடை மீது போட்டு தியானம் செய்வார்கள். இத...ற்கு காரணம் இடது காலை மடக்கி தியானம் செய்யும் போது வலது பக்கமாக சுவாசம் போகும். வலது என்றால் தமிழில் வெற்றி என்று பொருள். வலது பக்கமாக சுவாசம் செல்லும்போது தியானம், பிராத்தனை எல்லாம் கண்டிப்பாக பலன் தரும். அதனால் இந்த நாடியை அடக்குவதாக இருந்தால் வலது பக்க சுவாசத்திற்கு மாற்றவேண்டும். அதே மாதிரி ஒரு அமைப்புத்தான் மூக்குத்தி.
 நமது மூளைப் பக்கத்தில் ஹிப்போதலாமஸ் என்ற பகுதி இருக்கிறது. நரம்பு மண்டலங்களை கட்டுப்படுத்தக் கூடிய, செயல்படக் கூடிய அளவு சில பகுதிகள் உள்ளன. அந்தப் பகுதியில் சில உணர்ச்சி பிரவாகங்கள் உள்ளன. இதனைச் செயல்படுத்துவதற்கு அந்தப் பகுதி துணையாக இருக்கிறது. இப்படி இந்தப் பகுதியை அதிகமாக செயல் படுத்துவதற்கும் பெண்ணின் மூக்கில் இடது பக்கத்தில் குத்தக்கூடிய முக்குத்தி வலது பக்க மூளையை நன்றாக செயல் படவைக்கும். இடது பக்கத்தில் முளை அடைப்பு என்றால் வலது பக்கத்தில் நன்கு வேலை செய்யும். வலது பக்கம் அடைத்தால் இடது பக்கம் உள்ள மூளை அதிகமாக இயங்கும்.
 

இன்றைய நம்முடைய மனித வாழ்க்கைக்கு அதிகமாக இந்த இடது பக்க மூளையை அடைத்துவலது பக்கமாக வேலை செய்ய வைக்கிறோம். அதனால் வலது கை, வலது கால் எல்லாமே பலமாக உள்ளது. பெண்கள் முக்குத்தி அணியும்போது, முன் நெற்றிப் பகுதியில் இருந்து ஆலம் விழுதுகள் போல்சில நரம்புகள் நாசி துவாரத்தில் இறங்கி கீழே வரும். இப்படி விழுதுகள் மூக்குப் பகுதியிலும், ஜவ்வு போல மெல்லிய துவாரங்களாக இருக்கும். ஆலம் விழுதுகள் போல உள்ள மூக்குப் பகுதியில் ஒரு துவாரத்தை ஏற்படுத்தி அந்த துவாரத்தில் தங்க முக்குத்தி அணிந்தால், அந்த தங்கம் உடலில் உள்ள வெட்பத்தை கிரகித்து தன்னுள்ளே ஈர்த்து வைத்துக் கொள்ளும் சக்தியைப் பெறும். அதுமட்டுமல்ல, மூக்கின் மடல் பகுதியில் ஒரு துவாரம் ஏற்பட்டால் அதன் மூலம் நரம்பு மண்டலத்தில் உள்ள கெட்ட வாயு அகலும்.

சிறுமிகளுக்கு மூக்குத்தி அணிவிப்பது கிடையாது. பருவப் பெண்களுகே முக்குத்தி அணிவிக்கப்ப்டுகிறது. பருவ வயதை அடைந்த பெண்களுக்கு கபாலப் பகுதியில் அதாவது, தலைப்பகுதியில் சிலவிதமான வாயுக்கள் இருக்கும்.இந்த வாயுக்களை வெளிக்கொண்ருவதற்கு ஏற்படுத்தட்டதுதான் இந்த மூக்கு குத்துவது. மூக்கு குத்துவதால் பெண்களுக்கு ஏற்படக்கூடிய சளி, ஒற்றைத் தலைவலி, மூக்கு சம்பந்தமான தொந்தரவுகள், பார்வைக் கோளாறு சரி செய்யப்படுகின்றன்.
 

இன்றைக்கு நாகரிகம் வளர்ந்து விட்டதால் சில பெண்கள் வலதுப் பக்கம் மூக்குத்தி அணிகிறார்கள். ஆனால், சாஸ்திர ரீதியாக இடப்பக்கம்தான் பெண்கள் மூக்குத்தி அணியவேண்டும். இடது பக்கம் குத்துவதால் சில மாற்றங்கள் ஏற்படும். சிந்தனா சக்தியை ஒரு நிலைப்படுத்துகிறது. மனதை அமைதிப்படுத்துகிறது. தியானம், பிராத்தனையில் ஈடுபட உதவுகிறது. ஒற்றைத்தலைவலி, நரம்பு சம்பந்தமான நோய்கள், மனத்தடுமாற்றம் ஏற்படாமல் இருக்க முக்குத்தி உதவுகிறது என்று ஞானிகளும் ரிஷிகளும் கூறியிருக்கின்றனர்.

உடலிலுள்ள வெப்பத்தைக் கிரகித்து நீண்ட நேரம் தன்னுள்ளே வைத்திருக்கூடிய ஆற்றல் தங்கத்துக்கு இருக்கிறது. தங்க நகைகளைப் பெண்கள் அணிவதன் மூலம் உடலில் ஏற்படும் அதிக வெப்பம் உணர்ச்சியாக மாறுவதிலிருந்து தடைப்பட்டுபோகும். அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு, ஆகிய நால்வகைப் பண்புகள் உடையவர்களாகத் திகழ முடியும். தங்க நகைகள் அணிவதால் உணர்ச்சிப் பிரவாகம் தடைப்பட்டு பெண்களின் உடல் வெப்பம் சம நிலையடைகிறது. இதனால் அவர்களது வாழ்க்கை தர்ம நெறிகளுக்கு உட்பட்டு

திரு நங்கைகள்

 
திரு நங்கைகள்- ஒரு சமூகத்தின் அவலமா ? தயவு செய்து நண்பர்கள் இதை பொறுமையாக படித்து விட்டு செல்லுங்கள். தகப்பனுக்கோஅவமான சின்னமாய் உடன்பிறப்புகளுக்கோ கேலியாய் உறவினர்களுக்கோ வேடிக்கையாய் சமுதாயத்திற்கோ கேள்வி குறியாய் எங்களுக்கோ வாழ்க்கை தவிப்பாய் நாங்களும் மனிதர்கள் தானே , எல்லோரும் இந்நாட்டு மன்னர்கள் என்பர் எங்களை ...மன்னராய் மனிதராய் வேண்டாம் மனிதராய் மதியுங்கள் மனமில்லா எங்களிடம் தாயே அணைக்க மறுத்த சேய்கள் நாங்கள் வேறு யார் வந்துதான் எங்களை ஆதரிப்பார்கள் கிராமப்புரங்கள் முதல் நகரங்கள் வரை ஒருவரை சிறுமைபடுத்தவோ கேவலப்படுத்தவோ பயன் படுத்ப்படும் சொல் “ பொட்டை, அலி , ஒம்போது ” பலருக்கு இந்த கருத்து உண்டு. இவங்க எல்லாம் எதுக்கு உயிர் வாழராங்க ஒம்போதாயிட்டோம்னு தெரிஞ்சஉடனே நாண்டுக்கிட்டு சாக வேண்டியது தான.
 
ஒருவருக்கு குழந்தை இல்லை என்றால் கூட அலி என அழைப்பது வழக்கமாகிவிட்டது. ஒரு சமுகத்தில் பெண்ணின் வயிற்றை கிழித்து சிசுவை கொன்றவனைப்பற்றியோ தின்ணியத்தில் மனிதன் வாயில் மலத்தை திணித்த்தவனை பற்றியோ வாய் திறவாத இச்சமூகம் பாலின வேறு பாடுள்ள ஒரு சமூகத்தையே சாகச்சொல்கின்றது. மானம் ( மனம் ) கெட்ட மனிதன் . ஆண் பெண் என்பதனை உறுப்பின் மூலமாக அறிகின்றோம்.அதனால் திரு நங்கைகள் சுமார் 13 வயது வாக்கில் தான் கண்டறியப்படுகிறனர் அந்த வயதில்தான் ஆணும் பெண்ணும் பருவ மாற்றம் அடைகின்றனர். மேலை நாடுகளில் திரு நங்கை சமமாக நடத்தப்படுவதாக கூறப்படுகிறது. இந்தியாவில் குறிப்பாக சில மாநிலங்களில் திருநங்கைகள் நிலை மிகவும் அவமானகரமானதாக உள்ளது. இந்து மத வழக்கப்படி அரவணி என அழைக்கப்படுகிறனர். ஆனா என்னை பொறுத்தவரை திருநங்கை எனவும் திருமங்கை என்று அழைக்கலாம், சமுகத்தில் வெறி பிடித்த மனிதர்கள் சிலர் பெண்னை அடிமையாய் வைத்திருப்பது போல திரு நங்கை பாலியல் ரீதியிலான அடிமையாக வைக்கப்பட்டிருக்கின்றனர். இந்த சமுதாயத்தில் ஆண், பெண், விலங்குகள் வாழலாம் ஆனால் திரு நங்கை வாழக்கூடாது. பண்டைய கால இலக்கியங்கள் முதல் தற்கால ஊடகங்கள் வரை திரு நங்கைகளை கேலிப்பொருளாகவே பயன் படுத்துகிறனர்.
 
மனித இனத்தாலேயே ஒரு பாலினம் கேவலப்படுத்தப்பட்டு புறக்கணிக்கப்பட்டு வருவது கொடுமையிலும் கொடுமை.. அதாவது உன்னை மனிதனாக ஏற்க முடியாது என்று கூறுகின்றனர் கழிவறை முதல் பேருந்து வரை எல்லா இடத்திலும் உரிமைகள் மறுக்கப்பட்டு வருகிறது. நீ செய்ய வேண்டிய ஒரே தொழில் பாலிய்ல் தொழில் என பல்லை காட்டுகிறது சமூகம். அதற்காகவ படைக்க பட்டர்கள் அவர்கள் யோசியுங்கள் . இரு திரு நங்கைகள் ரோட்டில் நடந்து சென்றால் ஆண்கள், பெண்களின் கேலிக்கும், நமட்டு சிரிப்புக்கும் ஆளாகாமல் இருக்க முடிகிறதா ? இப்படி செல்லும் இடங்களிலெல்லாம் உளவியல் மனோரீதியிலான கடும் நெருக்கடிக்கு ஆளாக்கப்பட்டு பெரும்பாலான் திரு நங்கைகள் வயிற்று பிழைப்புக்காக பாலியல் தொழிலையும் பிச்சையெடுத்தலையும் செய்கின்றனர். திரு நங்கைகளில் சிலர் செய்யும் தவருதளுக்காக ஓட்டு மொத்த திரு நங்கைகளில் குறை கூறுவது தவறு. தப்பு பண்ணுகிற நிறையபேர் ராஜவாழ்க்கை வாழும் போது இவங்க என்ன தப்பு செஞ்சாங்க..? எதுக்கு இந்த சமுகம் இவர்களுக்கு இவ்ளோ பெரிய இழிவை தந்திருக்கிறது ? இப்படி பிறந்தது இவங்க தப்பா ? இவங்களுக்கு மரியாதையும் அங்கீகாரமும், தராம அவங்களை இந்த நிலைக்கு கொண்டுவந்தது நம் சமுகம்தானே சமுகத்தில் நாமும்தான் இருக்கிறோம் என்பதை மரவாதிர்கள். 
 
நானும் சிறு வயதில் இவர்ககளை கண்டு ஒதுங்கி இருக்கிறேன் இல்லையென்று சொல்லவில்ல, இதற்க்கு காரணம் எனது பெற்றோர்கள். அவர்களுக்கு போதுமான அளவு விழிப்புணர்வு இல்லை அப்போது ஆனா இப்போது அவர்களுக்கு நான் எடுத்துரைகின்றேன். மேலும் நமது குழந்தைகளுக்கு இவர்களைப்பற்றி தெளிவாக நாம் சொல்லி கொடுத்து இருக்கிறோமா ? இல்லை இனியாவது நாமும் நமது குழந்தைகளுக்கும் இவர்களை பற்றி புரியாத நபர்களுக்கும் எடுத்துரைப்போம். திருமங்கைகள் பற்றிய விழிப்புணர்வு அனைவரிடமும் வரவேண்டும். அவர்களுக்கு சமூகத்தில் ஒரு நல்ல இடம் அளிக்க வேண்டும். எல்லா உயிரும் ஒன்றே இவர்களை ஒதுக்காமல் ஆதரவு கொடுப்போம்......பொறுமையாய் படித்த நண்பர்கள் அணைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

மனிதன் ஒருநாளும் தெய்வமாக முடியாது


மனிதன் ஒருநாளும் தெய்வமாக முடியாது.
இதை நிரூபிப்பதற்கு இந்த புகைப்படமும் ஒரு சாட்சி.
இங்கே நாம் படத்தில் பார்ப்பது, திரைப்பட பின்னணி பாடகி சித்ரா அவர்களும்,அவரது 8 வயது மகளும், திரு மறைந்த சாயிபாபா அவர்களிடம் ஆசீர்வாதம் பெற வந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படம்.
 இன்றைய தேதியில் ஆசீர்வாதாம் வாங்கிய அந்த 8 வயது குழந்தையும் இந்த உலகில் இல்லை.
          அந்த குழந்தையின் சிறப்பிற்காக ஆசீர்வாதம் வழங்கிய சாயிபாபா அவர்களும் இந்த உலகில் இல்லை.
எதிலுமே எல்லாவற்றையும் மிஞ்சியதை தனது சொந்தமாக பாவிக்க விரும்பும் மனிதன், மரணிக்கக்கூடிய மனிதர்களையும், அழியக்கூடிய விசயங்களையும் வணகுவது ஆச்சர்யமாகவே உள்ளது...!!!