எய்ட்ஸ் நோயை குணப்படுத்த இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. இது தொடர்பாக மருத்துவ அதிகாரிகள்
பல்வேறு வித ஆராய்ச்சில் ஈடுபட்டு வருகின்றனர்.
இப்போது நம்பிக்கைதரும் வகையில் விஞ்ஞானிகள் ஒரு தகவல் வெளியிட்டுள்ளனர்.
விரைவில் எய்ட்ஸ் நோயை கட்டுப்படுத்த தடுப்பூசியை உருவாக்கி
விடுவோம் என்று அறிவித்துள்ளனர் .
மனிதன் உடலில் இயற்கையாகவே நோய் எதிர்ப்பு சக்திகள் உள்ளன .
இதில் அதிக திறன் கொண்ட 17 மூலக்கூறுகளை விஞ்ஞானிகள்
கண்டுபிடித்துள்ளனர் .
இதை மேலும் மேம்படுத்துவதன் மூலம் எய்ட்ஸ் நோயையும் மனிதர்களுக்கு ஏற்படாமல் தடுத்து விடலாம் என்று அவர்கள் கூறியுள்ளனர் .
எனவே இந்த மூலக் கூறுகளை மேலும் வீரியாமாக்க தடுப்பூசி மருந்தை உருவாக்கி வருகின்றனர்.
விரைவில் இந்த மருந்து கண்டுபிடிக்கப்பட்டு பயன்பாட்டிக்கு கொண்டு
வரப்படும் என்று அவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
இதனால் எய்ட்ஸ் நோயை முன் கூட்டியே தடுத்து முற்றிலு விரட்டி விடலாம்
என்று அவர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த தகவல் மருத்துவ அறிக்கை ஒன்றில் வெளியிடப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment