Friday, February 10, 2012

ஆனந்தம் என்பது தனக்காக வைத்துக் கொள்வதிலல்ல


 
கனடாவில் ஆலன்- வயலட் லார்ஜ் என்ற ஒரு முதிய தம்பதியர் வசிக்கிறார்கள்.அவர்களுக்கு ஜாக்பாட்(2010 வருடம் ) அடித்தது! நிஜமாகவே ஜாக்பாட். லாட்டரியில் 11.2 மில்லியன் டாலர்கள். தோராயமாய் கணக்குப் போட்டுப் பார்த்தால் 55 கோடி ரூபாய் என்று வைத்துக் கொள்ளலாம். விஷயத்தைக் கேள்விப்பட்டபோது அவர்கள் சிலிர்த்தார்கள்.

ஆனால் அவர்களுடைய மனம் அந்த லாட்டரிப் பணத்தை விட வெகு விசாலமாய் இருந்தது. 'இந்த பரிசுத் தொகையை முழ...ுமையாய் ஏழைகளுக்கே அளிக்கிறோம்' என்று அவர்கள் அறிவித்தனர். உலகமே வியந்தது. மருத்துவமனைகள், புற்றுநோய் சிகிச்சை, காப்பகங்கள் என பல இடங்களுக்கு இந்தப் பரிசுத் தொகை பகிர்ந்தளிக்கப்பட்டது!

ஆனந்தம் என்பது தனக்காக வைத்துக் கொள்வதிலல்ல, பகிர்தலில் என்பதைப் புரிந்து கொண்டதுதான் அந்த தம்பதியரின் வெற்றி. அவர்களுடைய வாழ்க்கை நிச்சயம் ஆனந்தத்தின் வீதிகளில் இளைப்பாறும் என்பதில் சந்தேகமில்லை.இன்று எவ்வளோ பேர் இந்த மாதிரி இருப்போம்...இவர்களை பாராட்ட வார்த்தைகளே இல்லை .. !!!

No comments:

Post a Comment