Tuesday, February 28, 2012

நினைவஞ்சலி விளம்பரம் ஒரு மோசடி - அதிர்ச்சி ரிப்போர்ட்

அக்காதான் குடுத்து வைக்கவில்லை நான் உங்களோடு கதைக்க ஆசைப்படுகிறேன் என்று, இறந்த காதலியின் தங்கை தற்போது இந்த இளைஞனோடு தொடர்பை ஏற்படுத்தியிருக்கிறாராம். சுருக்கமாகச் சொல்லப்போன...ால், இறந்த காதலியின் தங்கை இப்போது இந்த இளைஞனை காதலிக்கிறாராம். இனி இவர் படிப்புக்கு, குடும்பச் செலவுக்கு என்று எல்லாம் காசு கறக்கும் நாடகம் ஆரம்பமாகும். இப்படியே ஒரு வட்டம் செயல்பட்டு வருகிறது. பேஸ்புக் ஊடாக இளைஞர்களை வளைத்துப் பிடிப்பது, அதுவும் விசா இல்லாவிட்டால் அவர் கொழும்புக்கு வரமாட்டார். பின்னர் பழகி காதலிப்பது போல் நடிப்பது, இந்தியாவில் ஏதாவது ஒரு மாநிலத்தில் உள்ள பெண் ஒருவரின் படத்தை எடுத்து அது தான் நான் என்று அனுப்புவது.

பின்னர் காசைக் கேட்பது. ஏதாவது ஏடாகூடம் ஆனால், அவள் செத்துவிடுவாள். இல்லையேல் கான்சர் வரும், இல்லையேல் இப்போது எனக்கு எயிட்ஸ் வந்துவிட்டது என்று சொல்லி நழுவிவிடுவார்கள் குளிரிலும் மழையிலும் கஷ்டப்பட்டு உழைக்கும் காசு காத்தோடு போய்விடும். குறிப்பிட்ட இளைஞர் ஒரு வருடத்தில் 10,000 பவுன்ஸுகளுக்கு மேல் அனுப்பியுள்ளாராம்.

குறிப்பாக சொல்லப்போனால் வெளி மாவட்டங்களிலிருந்து கல்வி கற்பதற்காகவும், தொழில்புரிவதற்காகவும் கொழும்புக்கு வந்து 5 அல்லது 5 பேராக ரூம் எடுத்துத் தங்கியிருக்கும் பெண்களே இவ்வாறான வேலைகளைச் செய்து வருவதாக ஆதாரமான தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர்களில் ஒரு சிலர் இலங்கையிலுள்ள ஊடகத்துறைகளில் பணிபுரிபவர்களாக தம்மைக் காட்டிக் கொள்வதுதான் வேதனையான விடயமாக இருக்கிறது.

பேஸ்புக் மூலம் வெளிநாட்டில் வசிக்கும் இளைஞர்களை நண்பர்களாக்கி அவர்களின் பலம், பலவீனம், வங்கி இருப்பு, எல்லாவற்றையும் அறிந்துகொண்டு கொஞ்சம் கொஞ்சமாக ஆசை வார்த்தைகளைக் காட்டி பணத்தைக் கறக்க ஆரம்பித்து விடுகின்றனர். பணம் இங்கு வந்ததும் பிறகென்ன உல்லாச வாழ்க்கைதான். MC, பிட்சா சென்ரர், KFC, பியூட்டி பார்லர் என தமது நண்பிகளுடன் அல்லது ஆண் நண்பர்களுடன் பணத்தை செலவழித்து முடிக்கின்றனர். கொழும்பில் இவர்கள் அடிக்கும் லூட்டிக்கு, வெளிநாட்டில் உள்ள தமிழ் இளைஞர்கள் தான் பலிகடாவாகின்றனர். வெளிநாடுகளில் உழைக்கும் இளைஞர்களே மிகவும் அவதானமாக இருங்கள். இச்சம்பவம் உங்களுக்கும் ஒரு பாடமாக இருக்கட்டும்.

No comments:

Post a Comment