Friday, February 10, 2012

பெண்களின் கையில் புதுவித ஆயுதம்! பெப்பர் ஸ்ப்ரே..

பெண்களின் கையில் புதுவித ஆயுதம்! பெப்பர் ஸ்ப்ரே... திருடன்களிடமிருந்து தப்பிப்பதற்காக இப்போது பொதுமக்களுக்கு சென்னை, காவல்துறை அறிமுகப்படுத்தியிருக்கும் தற்காப்பு சாதனம்!

... ''அப்படியா..! அதென்ன 'பெப்பர் ஸ்ப்ரே..?' '' என்று ஆச்சர்யப்பட்டு கேட்பவர்களுக்கு பதில் அளிக்கிறார் சென்னை, துரைப்பாக்கம் சரகம் உதவி ஆணையர் கே.என்.முரளி!..."கண்களை எரியவைக்கும் தன்மையுள்ள, திரவ வடிவ பொருள், ஸ்ப்ரே செய்யும் வசதியோடு இருக்கும் சாதனம்தான் 'பெப்பர் ஸ்ப்ரே'.

ஈவ் டீஸிங், வழிப்பறி திருடர்கள், வீடு தேடிவரும் திருடன்கள் என்று எதிரிகளின் கண்களில் சமயோஜிதமாக செயல்பட்டு இதை ஒருமுறை ஸ்ப்ரே செய்துவிட்டால் போதும், கண் எரிச்சலில் தவிக்கும் அந்த நபரால் இரண்டு மணி நேரத்துக்கு எழவே முடியாது. "இந்த 'பெப்பர் ஸ்ப்ரே' 35 கிராம் எடை கொண்டது. இருபதுமுறை ஸ்ப்ரே செய்யலாம். விலை 500 ரூபாய். எதிராளி எட்டடி தூரத்தில் இருந்தாலும் இதைப் பயன்படுத்தலாம். அதேசமயம், இதைப் பயன்படுத்துபவர்கள் மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டும். குறிப்பாக குழந்தைளின் கைகளில் கொடுத்துவிடக்கூடாது!" என்றார்.

அதற்குள் 'அவசர போலீஸ் 100' எண்ணுக்கு தகவலைச் சொல்ல வேண்டும். நாங்கள் வந்து அவர்களை அள்ளிக்கொள்வோம்! தேவைப்பட்டால் குற்றவாளிக்கு மருத்துவ சிகிச்சை அளித்து, சட்டப்படி நடவடிக்கை எடுப்போம்" என்று உற்சாகமாகச் சொன்ன முரளி,..."அமெரிக்காவில் வழிப்பறிக் கொள்ளை அதிகம் என்பதால், அவர்களிடம் இருந்து தற்காத்துக்கொள்ள பொதுமக்களுக்கு காவல்துறையின் மூலமே 'பெப்பர் ஸ்ப்ரே' வழங்கப்படுகிறது.


No comments:

Post a Comment